வெள்ளி, 26 ஜூன், 2009

கடலூர் மாவட்ட பொதுக்குழு

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத்-ன் கடலூர் மாவட்ட பொதுக்குழு 21.06.09 அன்று வடலூர்-ல் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!
மேலும்இப் பொதுகுழுவில்

1.மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் கண்தான பதிவு மையம் அமைப்பது. 2.மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் திருமண தகவல் மையம் அமைப்பது. 3.ஆகஸ்ட் மாதத்தில் தவ்ஹித் ஏழுச்சி மாவட்ட மாநாடு நடத்துவது 4.வட்டி இல்லாகடன் திட்டத்தை அணைத்து கிளைகலிலும் மேம் படுத்த வேண்டி திர்மானம் ஏற்றப்பட்டது,

மேலும் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் மற்றும் மாநில பேச்சாளர் அப்துன் நாசிர் ஆகிய மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.








Read more...

வியாழன், 25 ஜூன், 2009

தொ(ல்)லைக் காட்சிகள்
இந்தியாவில் சின்னத்திரையில் ஹிந்தி சேனல்களுக்கு அடுத்து தமிழகத்தில் தான் மிக அதிகமான சேனல்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 14 தமிழ் சேனல்கள் உள்ளன. இது தவிர அந்தந்த ஊர்களில் கேபிள் டி.வி. இணைப்பு தருபவர்கள் தனியாக உள்ளூர் சேனல்களை நடத்தி வருகின்றனர்.மக்களைச் சிந்திக்க விடாமலும், நற்காரியங்களைச் செய்யவிடாமலும் தடுக்கும் முதல் சாதனமாக இந்தத் தொலைக்காட்சிகளே உள்ளன.
ஆரம்பத்தில் இலவச சேனல்களாக இருந்த பல சின்னத்திரைச் சேனல்கள், இன்று கட்டணச் சேனல்களாக மாறி உள்ளன. மக்களுக்கு இலவசமாக சில காலங்கள் உருப்படாத காட்சிகளைத் தந்து, அதில் அவர்களை அடிமையாக்கி, பின்னர் அவர்கள் மூலம் கொள்ளை லாபம் அடிக்கத் தீட்டம் தீட்டி செயல்படுகின்றன பல முன்னணி சேனல்கள்.
சமீபத்தில் இலவச சேனலாக இருந்த முன்னணி டி.வி. சேனல் ஒன்று, கட்டண சேனலாக மாற்றப் பட்டது. இதற்காக கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தினர். அந்த டி.வி. சேனல், ஒரு வீட்டின் இணைப்பிற்கு மட்டும் 32 ரூபாய் கேட்பதாக கேபிள் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் சுமார் 50 ரூபாய் வரையிலும் கூடுதலாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
இதன் மூலம் மாதத்திற்குப் பல கோடி ரூபாய்களை அள்ளிக் கொண்டிருக்கிறது அந்த டி.வி.
சேனல்.கடுமையான கட்டண உயர்வை ஏற்று இன்றும் ஏராளமானோர் அந்த சேனல்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நல்ல செய்திகள் நிறைந்திருந்தால் அதற்காக செலவழிப்பதில் தவறில்லை. முழுக்க முழுக்க சினிமா, சீரியல் என்று மக்களை அடிமைப்படுத்தி நல்ல செயல்களைச் செய்யவிடாமல் தடுக்கும் இவற்றிற்குப் பணம் கொடுத்துப் பார்க்க வேண்டுமா?டி.வி. பார்ப்பதில் முத­டம் வகிக்கும் பெண்களை நாடகத்தில் அடிமையாக்கி இப்போது அறுவடை செய்கிறார்கள்.
குறிப்பாக, பெரும்பாலான சின்னத்திரைச் சேனல்களில் மக்களுக்குப் பயன் தரும் செய்திகள் மிக மிகக் குறைவு தான். அதிலும் அந்த டி.வி.யை எடுத்துக் கொண்டால் காலை 11.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 12.00 மணி வரையும் தொடர் நாடகங்கள். அதில் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் நாடகங்களும் அடக்கம்.
பெரும்பாலான நாடகங்கள் சமூகச் சீரழிவையே ஏற்படுத்துகின்றன. தவறுகள் எந்த விதத்திலெல்லாம் செய்யலாம் என்பதற்கு இந்த நாடகங்கள் நல்ல (?) வழி காட்டுகின்றனர். இதனால் கெட்டுப் போனவர்கள் ஏôரளம்.
இடையில் சில நிமிடங்கள் செய்திகள் வருகின்றன. அவை அனைத்தும் அந்த டி.வி. சேனல் சார்ந்துள்ள கட்சிக்கு ஆதரவான செய்திகள். அல்லது அந்தக் கட்சியைப் பாதிக்காத செய்திகள். நாட்டில் எவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தாலும் அந்தக் கட்சிக்கு எதிராக இருந்தால் முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. இதனால் உண்மையான செய்திகளை அதில் காணமுடிவதில்லை.
முழுக்க முழுக்க பயனற்ற நாடகங்கள், சினிமா, ஆபாசம், வன்முறைகள் நிறைந்த இந்தத் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்காக எவ்வளவு கட்டண உயர்வையும் ஏற்க மக்கள் குறிப்பாகப் பெண்கள் தயாராக உள்ளனர்.
சின்னத்திரையில் வர்த்தக விளம்பரங்கள் மூலம் நல்ல லாபத்தைக் கண்டு வரும் முதலாளிகள், கட்டண அலைவரிசையாக மாற்றி இன்னும் கொள்ளை லாபம் அடிக்கின்றனர்.தென் மாநிலங்களில் விளம்பரக் கட்டணம் கடுமையாக உள்ள ஒரே சேனல் அந்த டி.வி. மட்டுமே! வர்த்தக விளம்பரம் மூலம் கடுமையான வருமானம் கிடைத்தாலும் நடுத்தர வர்க்கத்தினர் மடியிலும் கை வைக்கத் துவங்கியுள்ளனர் அந்த டி.வி. உரிமையாளர்கள்.எந்தத் தொலைக்காட்சியாக இருந்தாலும் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கினால் தரமான செய்திகளும் உண்மை நிலவரமும் நமக்குக் கிடைக்கும்.
கட்டணங்களை கடுமையாக உயர்த்தும் போது அந்த டி.வி. சேனல்களை மக்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தால் இது போன்ற கடுமையான கட்டண உயர்வு ஏற்படாது.

Read more...

செவ்வாய், 23 ஜூன், 2009

ஏய்ட்சுக்கு மருந்து இஸ்லாம் மட்டுமே!

"பதினைந்து வயதுக்கு உட்பட்ட 70,000 குழைந்தைகள் ஹெச்.ஐ.வி என்னும் வைரஸ் பாதிக்கப் பட்டுள்ளார்கள்; அதாவது எய்ட்ஸ் என்னும் கொடிய நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்"

மத்திய சுகாதார முன்னால் அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25.08.07 அன்று இதை ராஜ்யசபாவில் அறிவித்தார்.


இந்தியாவில் மட்டும்மல்ல! உலகெங்கும் உள்ள சிறு குழந்தைகள் இன்றைக்கு எய்ட்ஸ்சுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் ஹெச்.ஐ.வி. யினால் பாதிக்கப்பட்ட 38.6 மில்லியன் மக்களில் இந்தக் குழந்தைகளும் விதிவிலக்கல்ல!


இதில் வேதனை என்னவெனில் இந்த தீமை எப்படி ஏற்பட்டது என்பதை இந்த உலகம் இன்னும் உணராமல் இருப்பது தான். பாதுகாப்பான உடலுறவுக்குக் காண்டத்தை உபயோகியுங்கள் என்று வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வதிலிருந்து இதை புரிந்து கொள்ளலாம்.


"பாதுகாப்பான உடலுற‌வுக்கு திருமணமே சிறந்த வழி" என்று சொன்னால் அதன் மூலம் விபச்சாரம் தவிர்க்கப்படுவதுடன் எய்ட்ஸ் நோய் பரவுவதும் தடுக்கப்படும். இப்படி அறிவிப்பதை விட்டு விட்டு, பாதுகாப்பான உறவுக்கு காண்டத்தை பயன்படுத்துங்கள் என்று அதாவது காண்டம் அணிந்து விபச்சாரம் செய்யுங்கள் என இன்று வரை அரசாங்கம் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

இப்படி விளம்பரம் தொடர்ந்து கொண்டு போனால் எய்ட்ஸின் பாதிப்பும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

உலகில் உள்ள மனிதனை எந்த இயற்க்கை நியதியில் படைத்தானோ அந்த இறைவனின் நியதிபடி நடக்காத வரை எய்ட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவுவதைத் தடுக்க முடியாது.

உலகில் உள்ள மார்க்கங்களில் இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மதமும், விபச்சாரத்திற்க்குக் கடுமையான தாண்டனையை விதிக்கவில்லை.

இஸ்லாமிய ஆட்சியில் மண முடிக்காத ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம் செய்து விட்டால் அவருக்கு 100 கசையடிகள் கொடுத்து நாடு கடத்த வேண்டும்.

மணம் முடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவரைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.

இது தான் விபச்சாரத்திற்க்கு இஸ்லாம் வழங்கும் தண்டனையாகும்.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்ப்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

(அல்குர்ஆன் 24:2)

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்த போது அஸ்லம் குலத்தை சேர்ந்த ஒரு மனிதர் அவர்கலிடம் வந்து, "நான் விபச்சாரம் செய்து விட்டேன்" என்று சொன்னார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக) நான்கு தடைவை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.

ஆகவே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து "உனக்கு என்ன பைத்தியமா ?" என்று கேட்டாகள். பிறகு "உனக்கு திருமணம் ஆகி விட்டதா? ' என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார்.

எனவே அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். பாறைகள் நிறைந்த (அல்லாஹர்ரா எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டார்.


அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)
நூல்:புகாரி 5270


உலகில் எய்ட்ஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்தவர்கள், சிந்தனையாளர்கள் அனைவரும் விபச்சாரத்திற்கு இத்தகைய தண்டனை வழங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்தச் சட்டத்தைத் தங்கள் நாடுகளில் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட முன்வைக்கின்றனர்.


இது போன்ற ஒரு சிறப்பான சட்டம் உலகெங்கும் நடைமுறையில் இருக்குமானால் இந்தக் கொடிய நோயை விட்டும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.


விபச்சாரத்திற்க்கு இவ்வளவு கடுமையான தண்டனையை இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில் திருமணத்திற்குறிய வழிகளை மிகவும் எளிதாக்கி இருக்கின்றது.


அத்துடன் மனிதர்களின் பாலுணர்வுத்த் தேவையை, தேட்டத்தை உணர்ந்து அவர்களுக்கு பலதாரமணத்தையும் அனுமதிக்கின்றது.


பொதுவாக ஓர் ஆணுக்கு அவனுடைய பாலுணர்வுத் தேட்டம் ஒரு பெண் என்ற வட்டத்தில் நிற்பதில்லை. இரண்டு மூன்று என்று அவனது தேட்டம் இருக்கும்.


மனிதனின் இயற்க்கை சுபவத்தை உணர்ந்த இயற்க்கை மார்க்கமான இஸ்லாம், நான்கு பெண்களை ஒருவர் திருமணம் முடிக்கலாம் என்ற அனுமதியை வழங்குகின்றது.


உன்னுடைய தேவையை இந்த வரையறைக்குள் வைத்துக் கொள்! இந்த வரம்பைத் தாண்டாதே! எய்ட்ஸ் போன்ற கடுமையான நோய்களை வரவழைத்து கொள்ளாதே! என்று இயற்கை மார்க்கம் கூறுகின்றது.


அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மூம்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமையை பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!) இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.

(அல்குர்ஆன் 4:3)


உலகில் இஸ்லாமிய மார்க்கம், அதாவது இயற்கை மார்க்கம் மட்டும் மனிதனின் தேவையை அறிந்து அதற்க்கு தீனியைக் கொடுத்து பசியைத் தணிக்கிறது.

அதையும் மீறி வேலி தாண்டினால் கடுமையாகத் தண்டிக்கிறது. எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் மனிதனை தாக்கமல் தடுத்து காக்கிறது.

Read more...

செவ்வாய், 16 ஜூன், 2009

கிரிக்கெட் மோகம்
பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பலகோடி முட்டாள்கள் பார்க்கின்றார்கள் என்று ஒருவர் ஒரு விளையாட்டைப் பற்றிக் கூறினார். அது தான் கிரிக்கெட் என்ற விளையாட்டாகும்.

இன்றைக்கு நம் இந்திய நாட்டில் தேச பக்திக்குரிய அடையாளமாக இந்த விளையாட்டு மாறிவிட்டது.

இந்திய கிரிக்கெட் அணியை நேசிப்பவன் தான் உண்மையான இந்தியன். மாற்று அணியையோ, அந்த அணி வீரர்களின் விளையாட்டையோ ரசிப்பவன் இந்தியாவிற்கு எதிரானவன் என்று கருதுமளவிற்கு இந்த விளையாட்டு இந்திய மக்களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்று விட்டது. அரசியல்வாதிகள் கூட கிரிக்கெட் வீரர்களைக் காட்டி ஓட்டுகளைப் பெற்றுவிடலாம் என்ற முடிவிற்கே வந்து விட்டனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் துவங்கியவுடன் நம் இந்திய நாடே ஒரு வித பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்து மதத்தவர்கள் இந்தியா வெற்றி பெறுவதற்காகப் பலவிதமான யாகங்களைச் செய்து கொண்டிருக்கும் வேளையில் சில இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையும் நடத்தியுள்ளனர்.

மேலும் நம் நாட்டின் பிரதமர், இந்திய அணி வெற்றி பெற பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எங்கும் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றுமா? என்ற பேச்சு தான். இந்த கிரிக்கெட் மோகத்திற்கு பெண்களும் விதிவிலக்கல்ல..

தாங்கள் நேசிக்கும் அணி தோற்றுவிட்டால் அதற்காக மிகப்பெரும் அளவில் கவலைப்படக்கூடிய மக்களையும் பார்க்கிறோம். இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தோற்று விட்டதற்காக ஒரு ரசிகர் மாரடைப்பில் இறந்து விட்டார். விளையாட்டு வீரர்களின் உருவப் பொம்மையை எரிப்பது, அவர்களின் வீடுகளைத் தாக்குவது போன்ற வன்முறைச் செயல்களிலும் தீவிர ரசிகர்கள் ஈடுபடுகின்றனர். இந்தியா தான் ஜெயிக்கும், பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என்று இரு பிரிவாகப் பிரிந்து பலர் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

இந்தக் கிரிக்கெட் மோகம் முஸ்லிம்களையும் விட்ட பாடில்லை. இறைவனைத் தொழுவதற்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களிலும் கூட இந்த கிரிக்கெட் பேச்சு தான்.

பல ஊர்களில் மார்க்கப் பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்யும் போது இன்றைக்கு மேட்ச் உள்ளது; மக்கள் நிகழ்ச்சிக்கு வருகை தர மாட்டார்கள்; எனவே வேறொரு நாளில் வைத்துக் கொள்வோம் என்ற ஆலோசனையைப் பலர் கூறுகிறார்கள்.

பலர் இந்த போட்டியைப் பார்த்து ரசிப்பதிலேயே தங்கள் தொழுகையை மறந்து விடுகிறார்கள். நல்லமல்களைத் தொலைத்து விடுகிறார்கள்.குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றாதவர்கள் அறியாதவர்கள் வேண்டுமானால் வழி தெரியாமல் இது போன்ற விளையாட்டுக்காகத் தங்கள் நேரங்களையும் காலங்களையும் வீணாக்குவார்கள். ஆனால் குர்ஆன், ஹதீஸை கொள்கையாகக் கொண்டவர்கள் கூட இது போன்ற வீணான காரியங்களில் மூழ்குவது தான் நமக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:
”(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்” என கூறுவீராக!

(அல் குர்ஆன் 63:11)

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 6:32)

இந்த வசனங்களில் இறைவன் கூறுவதைப் போன்று தான் நம் சமுதாயத்தவர்களின் நிலை மாறிவிட்டது. இந்த விளையாட்டைப் பார்ப்பதற்காக பலர் தொழுகைகளைத் தொலைத்து விடுகின்றனர். இரவு முழுவதும் இதைப் பார்ப்பதற்காகக் கண் விழித்துக் காத்திருக்கின்றனர்.பொழுது போக்கிற்காக, குறிப்பிட்ட நேரம் மார்க்கத்திற்கு முரணில்லாத எந்த ஒரு விளையாட்டையும் பார்ப்பது தவறு கிடையாது. ஆனால் இந்த விளையாட்டைப் பார்ப்பதை மார்க்கக் கடமை போல் கருதி, மார்க்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் கூட புறந்தள்ளி விட்டு, தங்களுடைய காலங்களையும் நேரங்களையும் வீணாகக் கழிப்பவர்களை காலத்தின் அருமையை உணராதவர்கள் என்றே கருத வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:
காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

(அல்குர்ஆன் 104வது அத்தியாயம்)

தமக்குக் கிடைத்த மிகக் குறைந்த வாழ்நாட்களில் நல்லறங்கள் செய்து நன்மைகளை சேர்க்காமல் அவற்றை வீணாக்குபவன் மிகப்பெரும் நஷ்டத்தில் இருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட அத்தியாயத்தில் இறைவன் நமக்கு உணர்த்துகிறான்.

காலத்தின் அருமை தெரியாமல் நாம் அவற்றை வீணிலும் விளையாட்டிலும் கழித்து விடக் கூடாது. நம்முடைய மரணம் வருவதற்கு முன்பாகவே நமக்கு கிடைக்கின்ற காலங்களை நல்லறங்கள் செய்வதிலே விரைவு படுத்த வேண்டும்.. இதைத் தான் இறை நம்பிக்கையாளர்களுக்குரிய பண்பாக இறைவன் கூறுகின்றான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

(அல்குர்ஆன் 3:114)

அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன் 21:90)

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 3:133)

இவ்வுலக வாழ்க்கையில் நம்மை ஈர்க்கின்ற இந்த வீணான மனோ இச்சைகளில் அளவு கடந்து வீழ்வது தான் நம்முடைய மறுமையின் தோல்விக்குக் காரணமாக அமைகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவர்க்கம் சிரமங்களால் சூழப்பட்டுள்ளது. நரகம் மனோஇச்சைகளால் சூழப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: தாரமி (2720)

நமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களை வீணிலும் விளையாட்டிலும் கழித்து விடாமல் மறுமை வாழ்வின் வெற்றிக்காக அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நபியவர்கள் பல ஹதீஸ்களில் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து நற்செயல்கள் புரிந்து கொள்ளுங்கள். (அக்குழப்பங்களின் போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறை மறுப்பாளனாக மாறி விடுவான். மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இû றமறுப்பாளனாக மாறி விடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்று விடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் (186)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கி விடும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி (6514)

மேலும் பலர் தமக்குரிய ஒய்வு நேரங்களை சரியாகப் பயன்படுத்தாததால் இழப்புக்குள்ளாகி விடுகின்றனர் எனவும் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம்
2. ஓய்வு
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி (6412)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் எங்களுக்குரிய மூங்கிலாலான ஒரு குடிசை வீட்டைச் சரி செய்து கொண்டிருந்த நிலையில் நபியவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, ”இது என்ன?” என்று கேட்டார்கள். ”வீடு பாழடைந்து விட்டது. அதைச் சரி செய்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள், ”(மரணம் என்ற) அக்காரியம் இதை விட மிக விரைவானது” என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதி (2257)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தை செலவிடு. உனது இறப்புக்குப் பிந்திய நாளுக்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு.

நூல்: புகாரி (6416)

எனவே விளையாட்டை விளையாட்டாகக் கருதுவோம். நம்முடைய அதிகமான கால நேரங்களை நல்லமல்கள் அதிகம் செய்வதில் ஈடுபடுத்துவோம். இறைவன் நம் அனைவரையும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற மக்களாக ஆக்கி அருள்புரிவானாக!

-இப்னு யூசுப் கடையநல்லூர்

Read more...

சனி, 13 ஜூன், 2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே) தனி மனித இயக்கம ?
இது எந்த அளவுக்கு உண்மை?

? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி மனிதனை தக்லீத் (கண் மூடிப் பின்பற்றுதல்) செய்கின்றனர் என்பது தான் தற்போது செய்யப்படும் பிரச்சாரம். இது எந்த அளவுக்கு உண்மை?

! எந்த மனிதனையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எனவே தவ்ஹீத் ஜமாஅத்திலும் இதற்கு அனுமதி இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்துவோர் அதற்கான சான்றுகளை எடுத்துக்காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இந்த விஷயத்தில் குர்ஆன் வசனம் இப்படிக் கூறுகிறது. நபிவழி இப்படிக் கூறுகிறது. அதற்கு மாற்றமாக பி. ஜைனுல் ஆபிதீன் இவ்வாறு கூறுகிறார். அதை தவ்ஹீத் ஜமாஅத்தினர் கண்ணை மூடிப் பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட வேண்டும். அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தின் உரைகளில் ''நாங்கள் மார்க்கம் என்று எதை உங்களுக்குச் சொல் கிறோமோ அதைக் கண்ணை மூடி ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமது மேடைகளில் இதற்கு எதிராகத் தான் பேசப்பட்டு வருகின்றது. நாங்கள் சொல்வது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால் அதைப் பின்பற்றாதீர்கள் என்பது தான் 25 ஆண்டுகளாக நமது பிரச்சாரமாக இருந்து வருகிறது. எனவே பி. ஜைனுல் ஆபிதீனையோ வேறு எந்த மனிதரையுமோ இந்த ஜமாஅத் ஒருக்காலும் தக்லீத் செய்ததில்லை. இனியும் செய்யாது. இந்த இடத்தில் ஆச்சரியமான ஒரு உண்மையை விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பி. ஜைனுல் ஆபிதீனை சிலர் தக்லீத் செய்திருந்தனர். அவர்கள் தக்லீத் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் இருந்தது. யாரெல்லாம் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தார்களோ அவர்களில் ஒருவர் கூட பி. ஜைனுல் ஆபிதீனுடன் இன்று இல்லை. யார் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்யாமல் குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினார்களோ அவர்கள் மட்டும் தான் பி. ஜைனுல் ஆபிதீனுடன் உள்ளனர். இதைத் தக்க ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். நம்மோடு சேர்ந்திருந்து விட்டு தடம் புரண்டு விட்ட இயக்கத்தின் தலைவர் தனது பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில்,
''இவரது பேச்சைக் கேட்டு நிறைய தவறுகளைச் செய்து விட்டோம்; அதற்காக சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்கிறோம்''
என்று கூறியிருக்கிறார். இதை வேறு பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் பொருள் என்ன? இது காலம் வரை எங்கள் மூளையை அடகு வைத்து விட்டு பி. ஜைனுல் ஆபிதீன் என்ன சொன்னாலும் தலையாட்டி வந்தோம். சமுதாயத்துக்கே துரோகம் செய்து வந்தோம்; என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. அதாவது இவர்கள் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டு ஒரு மனிதன் சொன்னதைத் தக்லீத் செய்துள்ளனர். அந்த மனிதன் மீது வெறுப்பு ஏற்படும் வரை அவன் செய்யச் சொன்ன எல்லா அக்கிரமத்தையும் செய்து வந்தனர். சமுதாயத்திற்கு துரோகம் செய்யச் சொன்னாலும் அதையும் செய்தனர். நல்லவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தத் தனி மனிதன் சொன்னால் அதையும் செய்தனர். காட்டிக் கொடுக்கச் சொன்னால் காட்டிக் கொடுத்தனர். இவர்கள் செய்த அனைத்துமே இவர்களால் சிந்தித்துச் செய்ததல்ல, ஒரு மனிதனைக் கண் மூடிப் பின்பற்றிய தால் தான் இவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது. எனவே தான் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தவர்கள் அனைவரும் அவரை விட்டு ஒதுங்கி விட்டனர். நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்த்தவர்கள் மட்டும் நியாயத்தின் பக்கம் நின்று விட்டனர். அதே இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் ஏப்ரல் 10க்குப் பின் தொழுகையில் விரல் அசைப் பதை விட்டு விட்டனர். இதற்குக் காரணம் என்ன? நபிவழியை விளங்கி அதில் நம்பிக்கை வைத்து அதை அவர்கள் செய்யவில்லை. ஒரு மனிதனைக் கண்மூடி பின்பற்றியிருக்கிறார்கள். அந்த மனிதன் இவர்களுக்கு எதிரியானவுடன் சுன்னத்தை விட்டு விட்டு புது வியாக்கியானம் கூற ஆரம்பித்து விட்டனர். பி. ஜைனுல் ஆபிதீனை கண்மூடிப் பின்பற்றியவர்கள் அவரை விட்டுப் போய்விட்டனர் என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது. ஏகத்துவப் பிரச்சாரத்தை ஒருவரது தலைமையில் நாம் செய்து வந்தோம். அவரது நடவ டிக்கை சரியில்லை என்பதால் அவரை மாற்றி விட்டு வேறு தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறோம். அந்த முன்னாள் தலைவர் கடந்த பிப். 27 அன்று நாகூரில்,
''அவர் கறுப்பை வெள்ளை என்று சொன்னால் நானும் வெள்ளை என்று கூறினேன். அவர் வெள்ளையை கறுப்பு என்று கூறினால் அவ்வாறே நானும் கூறினேன். 15 வருடங்க ளாக அவர் என்ன சொன்னாலும் அதைச் சரிகண்டு வந்தேன்''
என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். (மக்களெல்லாம் சுற்றி வளைத்து மடக்கிய போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின் வாங்கி ஒட்டம் பிடித்தார் என்பது தனி விஷயம்) 15 வருடங்களாக ஒரு மனிதன் கருப்பை வெள்ளை என்று கூறி யிருக்கிறான். தெரிந்து கொண்டே அதற்குத் தலையாட்டியுள்ளனர் என்றால் அதற்குப் பெயர் தானே தக்லீத். இந்த உண்மையை(?) கூட எப்போது சொல்கிறார்கள்? தூக்கி எறியாமல் இருந்திருந்தால் இன்னும் அதே தக்லீதைத் தான் செய்திருப்பார்கள். தக்லீத் எனும் மாபாவத்தைச் செய்த இவர்கள் தக்லீதை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் மீது இப்பழியைச் சுமத்துகின்றனர். இந்த இரண்டு குரூப்பைத் தவிர இன்னொரு குரூப்பினரும் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். ஏகத்துவ பிரச்சாரப் பணியைச் செய்வதற்காக நாம் கண்ட முதல் அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தான் குறிப்பிடுகிறோம். அமீர் சொல்வதை யாரும் எதிர்க்கக் கூடாது. மார்க்க விஷயமானாலும் நிர்வாக விஷயமானாலும் அமீரின் சொல்லை எதிர்க்கக் கூடாது என்று புத்தக மாகவே போட்டு பிரகடனம் செய்துள்ளனர். மார்க்க விஷயத்தில் கூட அந்த அமைப்பின் தலைவர் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும். அதை ஏற்பவர்கள் தான் இந்த அமைப்பில் இருக்க முடியும் என்று தெள்ளத் தெளிவாக அறிவிப்பது தான் தக்லீத். அதை ஏற்பது தான் தக்லீத். தக்லீதைக் கொள்கையாகக் கொண்ட இந்தக் கூட்டணி தான் நம்மீது அந்தப் பழியை போடுகிறது. அர்த்தமற்ற இது போன்ற உளறல்களை நிறுத்தாவிட்டால் அவர்களின் தக்லீத் பட்டியல் விரியும். அவமானம் சேரும்.
அழைப்பு பணியில் என்றும் அன்புடன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே)

புதுமடம் கிளை

Read more...

வியாழன், 11 ஜூன், 2009


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

வரலாற்று சாதனை புரிந்தது TNTJ மாணவர் அணி

அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் நமது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி ஓர் ஆண்டில் மட்டும் (28/05/08 to 31/05/09 - 53 வாரங்கள்) தமிழகத்தில் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி சரித்திரம் படைத்துள்ளது.

தமிழகத்தில் எவ்வளவோ முஸ்லீம் அமைப்புகள் , கல்வி அறக்கட்டளைகள் இருந்தும் நமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்காக எந்த முயற்ச்சியும் எடுக்கவில்லை. காரணம் கல்வி அறக்கட்டளைகள் நடத்தும் இவர்கள் கல்வி சேவைக்காக அறக்கட்டளைகள் நடத்தாமல் காசு சம்பாதிக்க அறக்கட்டளை நடத்துகின்றனர். இவர்கள் கல்வி நிறுவனங்களை நிருவி சிறுபாண்மை கல்வி நிறுவனம் என்று அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு ஏழை முஸ்லீம் மாணவர்களுக்கு உதவாமல், கல்வியை வியாபாரமாக்கி முஸ்லீம்களிடமே ஒரு சீட்டுக்கு இலச்சகணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களால் அடித்தட்டு முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதுவரை கல்வி செவையில் ஈடுபட்டவர்கள் வயதானவர்களாக இருந்த காரணத்தினாலும், தவ்ஹீத் இல்லாமையும், பெருமை, புகழ் விரும்பும் மனப்பான்மையும் பெரிய அளவில் இவர்களால் எதுவும் செய்ய இயலாமல் போனது.

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லீம்களுக்கு கல்வியில் வழிகாட்ட மாணவரணியை நிறுவி, கல்வி விழிப்புணர்வு பிராசாரத்தை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டது. இதனால் தவ்ஹீதை ஏற்ற படித்த இளைஞர்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் தமிழகம் முழுவதும் இடைவிடாமல் அடித்தட்டு முஸ்லீம் மக்களின் கல்வி வளர்ச்சிகாக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கொட்டும் மழையையும் , கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கிருபையால் ஒர் ஆண்டில் மட்டும் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி உள்ளனர். இதுவரை எந்த முஸ்லீம் இயக்கமும் செய்திறாத சாதனையை நமது TNTJ மாணவரணி செய்துள்ளது. தவ்ஹீதை உயிர் மூச்சாக கொண்டவர்களால் மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டம் முடியும் என்பதை மீண்டும் நிருபித்துள்ளது,

தவ்ஹீத் தங்களின் வளர்சிக்கு தடையாக உள்ளது என்று கூறியவர்களால் இதை சாதிக்க முடியவில்லை.( ஓட்டும் வாங்க முடியவில்லை). இந்த கல்வி சேவையில் ஈடுபட்டவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருப்பதினால்தான் உலக ஆதாயம் கருதாமல் மறுமை வெற்றி மட்டுமே குறிக்கோளக கொண்டு வேகத்தோடும் , வீரியத்தோடும் இத்தகைய சாதனைகளை புரிய முடிந்தது,
கல்வி சேவையோடு, முஸ்லீம் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் த்மிழகத்தில் 120 -க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவரணியை வழுப்படுத்தி உள்ளனர். முஸ்லீம்களை வைத்து உலக ஆதாயம் தேட முயலும் போலி முஸ்லீம் அமைப்புகளை மாணவர்களும் இளைஞர்களும் புறகணித்து இம்மை மறுமைக்கும் வழிகாட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

தமிழக முஸ்லீம் இளைஞர்களின் ஒட்டு மொத்த சக்த்தியாக நமது மாணவரணி உருப்பெற்றுள்ளது..

நமது மாணவரணி வரும் ஆண்டுகளில் கல்வி சேவையை தமிழகத்தின் அனைத்து கடை கோடி முஸ்லீம்களுக்கும் சென்றடையும் வகையில் தனது செயல்பாடுகளை பண்மடங்காக பெருக்க திட்டமிட்டுள்ளது இன்ஷா அல்லாஹ். நமது மாணவரணியின் சேவை இன்னும் சிறக்க அல்லாஹ்விடம் துவா செய்யுமாரு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

-S.சித்தீக்.M.Tech

TNTJ மாணவரணி கல்வி கருத்தரங்குகள் நடைபெற்ற 80 இடங்கள்

வட சென்னை மாவட்டம்
1. நேதாஜி நகர்
2. ஏழுகினறு
3. மண்ணடி
தென் சென்னை மாவட்டம்
4. திருவல்லிகேணி
5. ஜாம்பஜார்
6. சேப்பாக்கம்
7. தரமணி
காஞ்சி (மேற்கு) மாவட்டம்
8. தாம்பரம்
9. பல்லாவரம்
10. குன்றத்தூர்
11.. காஞ்சிபுரம்
12. உத்திரமேரூர்
13. பீக்கங்கரனை
14. காமராஜபுரம்
15. ரங்கநாதஜபுரம்
காஞ்சி (கிழக்கு) மாவட்டம்
16. கல்பாக்கம்
17. கானத்தூர்
18.. செங்கல்பட்டு
19. கூடுவாஞ்சேரி (வள்ளளார் நகர்)
திருவள்ளுர் மாவட்டம்
20. பட்டாபிராம்
21. அரக்கோணம்
22. மதுரவாயல்
23. அம்பத்தூர்
கடலூர் மாவட்டம்
24. மேல்பட்டம் பாக்கம்
25. பரங்கி பேட்டை

விழுப்புரம் மாவட்டம்
26. திண்டிவணம்
வேலூர் மாவட்டம்
27. பேரணம்பேட்
28. வேலூர்
திருவன்ணாமலை மாவட்டம்
29. வந்தவாசி
கிருஷ்ணகிரி மாவட்டம்
30. ஓசூர்
நாமக்கல் மாவட்டம்
31. நாமக்கல்
தர்மபுரி மாவட்டம்
32. தர்மபுரி
தஞ்சாவூர்(வடக்கு) மாவட்டம்
33. கும்பகோணம்
34. வழுத்தூர்
35. கதிராமங்களம்
36. சோழபுரம்
37. ஆவூர்
தஞ்சாவூர்(தெற்கு) மாவட்டம்
38. பட்டுகோட்டை
திருவாரூர் மாவட்டம்
39. திருவாரூர்
40. முத்துபேட்டை
நாகை(வடக்கு) மாவட்டம்
41. அரசூர்
42. துளசேந்திரபுரம்
நாகை(தெற்கு) மாவட்டம்
43. நாகபட்டினம்
44. நாகூர்
திருச்சி மாவட்டம்
45. சிங்காரதோப்பு
பெரம்பலூர் மாவட்டம்
46. லெப்பைகுடி காடு
புதுக்கோட்டை மாவட்டம்
47. புதுகோட்டை
48. அம்மாபட்டினம்
49. அறந்தாங்கி
இராமநாதபுரம் மாவட்டம்
50. இராம்நாட்
51. கீழகரை
சிவகங்கை மாவட்டம்
52. திருப்பத்தூர்
53. காரைகுடி
54.. இளையான்குடி
55. புதுவயல்
கோவை மாவட்டம்
56. போத்தனூர்
57. ஆனைமலை
58. ஆசாத் நகர்
59. பொள்ளாச்சி
திருப்பூர் மாவட்டம்
60. திருப்பூர்
61. மங்களம்
ஈரோடு மாவட்டம்
62. தாராபுரம்
63. ஈரோடு
சேலம் மாவட்டம்
64. சேலம்
மதுரை மாவட்டம்
65. காய்தேமில்லத் நகர்
66. அவனியாபுரம்
67. வில்லாபுரம்
தேனி மாவட்டம்
68. கம்பம்
திண்டுக்கல் மாவட்டம்
69. பேகம்பூர்
விருதுநகர் மாவட்டம்
70. விருது நகர்
71. அருப்புகோட்டை

நெல்லை மாவட்டம்
72. மேலப்பாளையம்
73. பாளையங்கோட்டை (ரஹ்மத் நகர்)
தூத்துக்குடி மாவட்டம்
74. செய்யுதுங்க நல்லூர்
75. ஆராம்பன்னை
76. தொங்கராங்குறிச்சி
குமரி மாவட்டம்
77. தக்கலை
பாண்டிசேரி
78. சுல்தான்பேட்டை
காரைகால்
79. காரைகால்
80. TR பட்டினம்

Read more...

செவ்வாய், 9 ஜூன், 2009

மாணவரணியின் மாபெரும் கல்வி விழிப்புண‌ர்வு மாநாடு மற்றும் கண்காட்சி
07.06.2009 அன்று சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள மதராஸே இ அஞ்ஞும் பள்ளியில் சென்னை மண்டல மாணவரணியின் மாபெரும் கல்வி விழிப்புண‌ர்வு மாநாடு மற்றும் கண்காட்சி நடந்தது. அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையாலும் உதவியாலும் சென்னை மண்டல மாணவரணியின் மாநாடு கண்காட்சி மிகவும் வெற்றிகரமாகவும் அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் பெரும் உதவி உள்ளதாகவும் அமைந்தது.... அல்ஹம்துலில்லாஹ் புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.

கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சி யின் ஏற்பாடுகளை மாணவரனியின் நிர்வாகிகளான சகோ. S.சித்திக்.M.Tech- மாநில செயலாளர் அவர்களும் K.சித்திக்.DRAC மண்டல மாணவர் அணிச் செயலாளர் அவ‌ர்க‌ளும் M.நஸீர் அஹமது சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் S.ஷமீம்.M.Sc மாநில மாணவர் அணி துணை செயலாளர்(வேலை வாய்ப்பு) அவ‌ர்க‌ளும் K.பஷீர் அஹமது.MCA மாநில மாணவர் அணி துணை செயலாளர்,(கல்வி உதவி) அவ‌ர்க‌ளும் N.அல்அமீன் B.E. மாநில மாணவர் அணி துணை செயலாளர்,(பத்திரிக்கை துறை, மாணவர் பிரச்சனைகளை எதிர்கொள்வது ) அவ‌ர்க‌ளும் . முஹமது ஷபி.B.ஏ மண்டல மாணவர் அணிச் செயலாளர் (கல்வி வழிகாட்டுதல்) அவ‌ர்க‌ளும் M.அப்துல் பாசித்.B.Sc.(B.L) மாநில மாணவர் அணி துணை செயலாளர்(அரசு துறை, சட்டம்) அவ‌ர்க‌ளும் A. இம்தியாஸ் சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் O.முஹமது நூருல்லாஹ் சென்னை மண்டல மாணவர் அணி துணை செயலாளர் அவ‌ர்க‌ளும் மற்றும் சென்னை மண்டல மாணவரனியின் உறுபினர்களும் மிகவும் சிறப்பாக செய்து முடித்திருந்தனர்

இந்த கண்காட்சியில் 25க்கும் மேற்ப்பட்ட அரங்குகளில் பல்வேறு துறைகளை பற்றி பல தகவல்களை தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள நமது மாணவரணியினர் ஏற்ப்பாடு செய்திருந்தனர் குறிப்பாக அங்கு அமைக்கப்பட்டிருந்த 10 மற்றும் 12 வகுப்புகள் முடித்த மாணவர்களுக்கான அரங்கம், பி.இ மற்றும் பி.டெக் போன்ற துறை பற்றிய அரங்கங்கள்,தொலை தூரக் கல்வி, முதுகளை, எம்.பி.ஏ,வேளை வாய்ப்பு, நுழைவுத் தேர்வு,சட்டக் கல்வி,பாதுகாப்புத் துறை, எம்.ஏ & எம்.காம், கலை மற்றும் வணிகம்,அறிவியல்,பொறியியல்,பத்திரிக்கைத் துறை வெளிநாட்டு படிப்புகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சம்மந்தமான அரங்குகளில் மாணவர்களும் பெற்றோர்களும் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

சகோதரர் சிவக்குமார் அவர்கள் ரேடியோகிராஃபி படிப்புகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார் மற்றும் சகோதரர் உமர் அவர்கள் காவல் துறையில் எப்படி நுழைவது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினார். சகோதரர் சஃபி அவர்கள் நமக்கு கிடைத்துள்ள இட ஒதுக்கீடு பற்றியும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் ஒரு விளக்க உரை நிகழ்த்தினார்.
தொலை தூரக் கல்வி அரங்கில் செங்கல்பட்டை சேர்ந்த சகோ. அப்துல் வகீப் மற்றும் பைசூர் ரஹ்மான் அவர்களும் முதுகளை படிப்பு பற்றிய அரங்கில் கும்பகோணத்தை சேர்ந்த சகோ. அப்துர் ரஹ்மான் அவர்களும் எம்.பி.ஏ பிரிவில் தஞ்சையை சேர்ந்த சகோ. ஆசிக், ஜாஃபர் சாதிக் மற்றும் முஹ்மத் ரிஜ்வான் அவர்களும், வேளை வாய்ப்பு பகுதியில் சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த சகோ. ஷஜஹான், முஹ்மத் அனஸ் மற்றும் முஹ்மத் ரியாஸ் அவர்களும், சட்டக் கல்வி பகுதியில் சென்னையை சார்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக் அவர்களும் பாதுகாப்புத் துறை அரங்கில் சென்னை அசோக் நகரை சார்ந்த சகோ தமிமுல் அன்சாரி அவர்களும், எம்.ஏ & எம்.காம் படிப்புகள் பற்றிய அரங்கில் குண்றத்தூரை சேர்ந்த சகோ. முஹ்மத் உசைன் அவர்களும், கலை மற்றும் வணிகம் தொடர்பான அரங்கில் சென்னையை சேர்ந்த சகோ. முஹ்மத் இஸ்மாயில், ஜாவீத் மற்றும் முஹ்மத் யூசுப் அவர்களும், அறிவியல் துறை சம்மந்தமான அரங்கில் சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த சகோ. அப்துல் லதீப் மற்றும் சாகுல் அவர்களும் பொறியியல் படிப்புகள் சம்மந்தப்பட்ட அரங்கில் சகோ. அப்துல் கரீம் மற்றும் மீரா மொயீதீன் அவர்களும் பத்திரிக்கை துறை சார்ந்த அரங்கில் சகோ. அலமீன் அவர்களும் வெளிநாட்டு படிப்புகள் தொடர்பான அரங்கில் சகோ. ஹனீப்பா அவர்களும் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான அரங்கில் க‌டலூரை சேர்ந்த சகோ. கலீலூர் ரஹ்மான் அவர்களும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சம்மந்தப்பட்ட துறை பற்றியும் விரிவான விளக்கம் அளித்தனர்.
இதில் மிகவும் ஹைலைட் என்னவேன்றால் நமது சமுதாயத்தை சார்ந்த மாணவ மாணவிகளின் பெற்றோகள் மட்டும் இல்லாமல் மாற்று மத சகோதரர்களும் கலந்துக் கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று சென்றது தான்.




இறுதியாக நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில மாணவரணி செயலாளர் சகோ. சித்திக் அவர்கள் மாணவரனியின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் சகோ. பக்கீர் முஹ்மத் அல்தாஃபி அவர்கள் சமுதாயத்தின் கல்வியாளர்கள் நிலை என்ற தலைப்பிலேயும் வட சென்னை மாவட்ட பேச்சாளர் பெற்றோரும் மாணவர்களும்(பிள்ளைகளும்) என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தி மாணவரனியின் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியை நிறைவு செய்தனர்.

இந்த மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியின் வெற்றிக்கு முழு முதல் காரணம் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே என்பது யாரலும் மறுக்க முடியாத ஒன்று.

கல்வி விழிப்புணர்வு மாநாடு மற்றும் கண்காட்சியின் புகைப்படங்கள்:

Read more...

வியாழன், 4 ஜூன், 2009


நிகழ்ச்சியின் அழைப்பிதழ்


(இன்ஷா அல்லாஹ்)

நாள் : ஜூன் 7 ஞாயிற்று கிழைமைநேரம் : காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம் : மதரஸாயே ஆஜம் மேல் நிலை பள்ளி, மவுன்ட் ரோடு, சென்னை ( LIC எதிரில் , ஸ்பென்சர் ப்ளாசா அருகில்)

கண்காட்சியில் இடம் பெறும் பகுதிகள்

உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்க்கான நுழைவுதேர்வுகள் பற்றி அறிய (IIT, IIM, IISc, NIT, Anna University , ect..)
வெளிநாட்டு படிப்புகள்,
வீட்டில் இருந்தே படிக்க (தொலைதூர கல்வி)
தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?
மத்திய மாநில அரசு தேர்வுகள் பற்றிய விபரம் அறிய IAS, IPS etc.. தேர்வுகள் பற்றிய விபரம் அறிய Group Exams RRB Exmans,காவல் துறை மற்றும் இராணுவத்தில் சேர்வதர்க்கான வழிமுறைகள்
பத்திரிக்கை துறையில் உள்ள படிப்புகள்
மேலும்B.E/B.Tech, M.B.B.S, M.E/M.TechB.A, B.Sc., B.Com, BBA, BCA, B.Lit etc..B.L, M.L, LLB etc..M.A, M.Sc., M.Com, etc..MBA, MCAB.Ed, M.Ed, M.Phil, PhdDiploma, ITI,B.Pharm, hotel management
போன்ற படிப்புகளை பற்றி அறிய, எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி அறியதமிழகத்தின் தலை சிறந்த கல்வியாளர்கள் பங்கு பெறுகின்றனர்
மாணவ, மாணவிகள்,பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவர் அணி
cell : 9884235802,9940205959
e-mail :
tntjedu@gmail.com visit : www.tntj.net, http://tntjsw.blogspot.com/
மாணவரணியின் இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் இன்ஷா அல்லாஹ்


Read more...

செவ்வாய், 2 ஜூன், 2009

கோடை தரும் கொடைகள்

உச்சி வெயில் அல்ல! காலை நேரத்தில் கிழக்கு சூரியனின் சுடர் முகத்தின் சிவப்பு தகத்தகாயம் தெரியத் துவங்கிய மாத்திரத்திலேயே நிலப் பரப்பில் நெருப்புச் சூடு பற்றி கொள்கின்றது அதன் பிறகு அது படிப்படியாக உச்சிக்கு வருகின்ற போது உஷ்ணத்தின் அளவும் உச்சக்கட்டத்திற்கு வந்து விடுகின்றது.

அனல் பந்தான சூரியன் அந்தி நேரத்தில் மேற்கு வானத்தில் அடைந்த பிறகும் அடக்கமான பிறகும் அது கிளப்பி விட்ட சூடு தணிந்திடவில்லை.
மின் விசிறிக்குக் கீழ் படுத்து இருந்தாலும் மேனி, வியர்வை வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கின்றது, பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் இந்த வெயிலில் சுருண்டு விழுந்தவர்களின் உயிரும் பறி போய் விடுகின்றது என்றால் இதன் உக்கிரமத்தை வர்ணிக்கத் தேவை இல்லை.

சின்னஞ்சிறு குழந்தைகளின் முகத் தாமரை மலர்களில் பொக்களங்கள்! மேனிகளில் வியர்க்குருகள்! கோடையின் இந்தக் கோரத் தாக்குதலுக்கு மாணவ, மாணவியர் பலியாகி விடக் கூடாது என்பதற்க்காக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றது.

வற்றி விடும் நீர் வறண்டு விடும் ஆறு

கோடை கால தாக்குதலின் காரனமாக நிலத்தடி நீர் வற்றி விடுகின்றது, பாய்ந்து ஓடும் ஆறுகள் காய்ந்து வறண்டு விடுகின்றன. குளம் குட்டைகள் எட்டிய தூரம் வரை தெரியும் ஏரிகள் எல்லாம் வற்றிப் பாலைவனமாகி விடுகின்றன.

இப்படிக் கோடையின் கொடூரங்களைப் பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம். இந்தக் கொடுமையின் ஊடே அல்லாஹ் கோடையிலும் சில அருட்கொடைகளை அருளி இருக்கின்றான்.

கோடை தரும் கொடைகள்

கொளுத்துகின்ற இந்தக் கோடையின் வெப்பத்தைத் தணிப்பதற்காக திடம் மற்றும் திரவ உணவாக இளநீர், பதநீர், நுங்கு,கிர்ணி, தர்பூசனி, வெள்ளரி போன்றவற்றை கோடை தனது கொடைகளாக தந்து கொண்டிருக்கிறது.
கோடையின் கொடுரத்திலிருந்து தப்பிப்பதற்க்காக பனை ஒலையால் முடையப்பட்ட விசிறிகளால் காற்றை வரவழைத்து வெப்பத்தை விட்டும் மக்கள் தங்களை காத்துக் கொண்டனர். இன்றைய அறிவியல் உலகம் ஒலைகளை வைத்து கிளறும் காற்று மண்டலத்தை மின் விசிறியின் இலைகளை வைத்துக் கிளறினால் என்ன? என்று கிளறியதில் பிறந்தது மின் விசிறிகள்.

கொதிக்கும் வெப்பத்தை குளித்துத் தணித்தல்

கொதிக்கும் வெயிலிலிருந்து தப்பிப்பதற்காக குளிரும் நீரில் விழுந்து குளித்து இளைப்பாறிக் கொள்கின்றான். குளிர்ந்த நீரைக் குடித்து தாகத்தை தணித்து தண்னை இதப்படுத்திக் கொள்கின்றான். தன் இதயத்தை ஈரப்படுத்திக் கொள்கின்றான்.

கொஞ்சம் காசிருந்தால் ஏ.சி யில் குளிர்ந்து கொள்கின்றான். இது செயற்க்கை! இந்த சுகத்தை இயற்க்கையாகவே அனுபவிக்க வேண்டும் என்று ஊட்டி கொடைக்கானல் என்று குடும்பத்தோடு செல்கின்றான். இதற்காக முண்டியடித்துக் கொண்டு முன்பதிவு செய்து கொள்கின்றான்.

எல்லாம் எதற்க்காக ? ஓர் இரண்டு மாத கோடையிலிருந்து தப்புவதற்க்காக!

இப்போது கொஞ்சம் நினைத்து பாருங்கள் ! இந்த உலகத்தில் வருடம் முழுவதும் கோடையாக இருந்தால் நமது பாடு எப்படியிருக்கும்? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!

கோடையை தணிப்பதற்குக் காற்று, மாலை நேரத் தென்றல் ஏ.சி. குடிக்கத் தண்ணீர், குளிக்க ஆறுகள், கோடை மழை, ஊட்டி கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்கள் என அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பயன்படுத்திக் கொள்கிறோம் இது அனைத்தும் இந்த உலகத்தில் தான். மறுமை உலகம் ஒன்றுள்ளது. அங்குள்ள நரகம், அதில் தங்குவோருக்கு அது தான் நிரந்தர உலகம். அதை பற்றி அல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்.
நிரந்தர நெருப்புலகம்

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்

(அல்குர்ஆன் 78:23)

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.

(அல்குர்ஆன் 87:12,13)

அவர்களின் மேற்புறத்திலிருந்து கால்களுக்குக் கிழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாள்! " நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்காள்" என்று (இறைவன்) கூறுவான்.

(அல்குர்ஆன் 29:55)

குளிர் நீரல்ல! கொதி நீரே!

அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களை சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்

(அல்குர்ஆன் 18:29)

அதற்க்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர். தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.

(அல்குர்ஆன் 56:54,55)

அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அதை மிடறு மிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள் இறங்காது. ஒவ்வொரு திசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்க்கு மேல் கடுமையான வேதனையும் உள்ளது.

(அல்குர்ஆன் 14:16,17)

இப்படி நிரந்தர உலகை நினைவுருத்துவது தான் கோடை!

"வெப்பம் கடுமையாகும் போது லுஹரைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம்: புகாரி 534, முஸ்லிம் 72

இந்த கொடிய நரகத்திலிருந்து நிரந்தர சுவனபதி செல்வதற்காக இந்தக் கோடையிலிருந்து பாடம் கற்போமாக! நிரந்தர நரகத்தில் சேர்க்கும் கொடிய பாவமான இணை வைப்பு என்னும் பாவத்தை விட்டு நம்மையும் நம் சமுதாய மக்களையும் காப்பதற்க்கு நாளும் உழைப்போமாக! அதுவே நமது இலட்சீயமாகும்.

Read more...

திங்கள், 1 ஜூன், 2009

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


முஸ்லீம்களின் கல்வி பொருளாதார நிலை ஓர் ஆய்வு, தீர்வு


கடந்த 60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவருகின்றது. இந்தியாவில் வாழும் அனைத்து பிற்பட்ட சமுகங்களை விட முஸ்லீம் சமுதாயம் பின் தங்கி உள்ளது. தலித் சமுதாயம் மற்றும் மழைவாழ் மக்களை விட முஸ்லீம் சமுதாயம் பின் தங்கியதிற்கு முக்கிய காரணம் முஸ்−ம்களின் கல்வியை பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, கல்வியை மறந்ததால் இந்த சமூகம் கடைரிலையில் உள்ளது. 2006 ஆம் ஆண்டு வெளியிட்ட சச்சார் குழு அறிக்கையில் முஸ்லீம்களின் கல்வி பொருளாளதார நிலை தெளிவாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. முஸ்லீம்களில் 41% படிப்பறிவில்லாதவர்கள் 8ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 15%, +2 வரை படித்தவர்கள் 7.8%, டிப்ளோமா வரை படித்தவர்கள் 4.4% பட்ட படிப்பு படித்தவர்கள் 1.7% பேர் மட்டுமே, 38.4% பேர் வறுமையில் வாழ்கின்றனர், கிராமபுற முஸ்−ம்களில் 62% பேர் அடிப்படை வசதியில்லாத வீடுகளில் வாழ்கின்றனர், பாதுகாப்பு துறையில் 4% பேர் முஸ்லீம்கள் தமிழக உள்துறையில் உயர்பதவிகளில் 0% ஒருவர் கூட முஸ்லீம்கள் இல்லை (2006 கணக்கு படி), கீழ்மட்ட பதவியில் 2.6% பேர் உள்ளனர்.


இதுதான் முஸ்லீம் சமூகத்தின் தற்போதைய நிலை, இது தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லீம் சமுதாயம் மிகவும் பின் தங்கிவிடும். சில பெற்றோர்கள் உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக படிக்கும் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதன் அபாயத்தை அவர்கள் உணர்வதில்லை, இன்றைக்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இடத்தின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்துள்ளது, இதனால் வீட்டு வாடைகையும் உயர்ந்து வருகின்றது. எதிர்காலத்தில் நாம் சம்பாதிக்கும் 3 ஆயிரம், 5ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்றது இதனால் முஸ்லீம்கள் நிரந்தர நரகத்திற்கு அனுப்பும் வட்டியில் சிக்க நேரிடும், மேலும் பொருளாதார தேவையால் சமூக சீர்கேடுகள் அதிகரித்துவிடும்.


கல்வி முன்னேற்றம் என்பது வெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில் நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக கட்டமைப்பை உருவாக்க முடியும் பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர், இந்தியாவில் வேலை இல்லை என்று இவர்களாக முடிவு செய்து கொண்டு வெளிநாடு சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகளை பிரிந்து அயல் நாட்டில் கஷ்டப்பட்டு, குடும்பம் என்ற கட்டமைப்பு இல்லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர், கணவன் இருந்தும் இல்லாத நிலையில் வாழும் மனைவி, தந்தை இருந்தும் இல்லாத நிலையில் வளரும் பிள்ளை, இது முஸ்லீம் சமுதாயத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகளை உருவாக்குகிறது.


ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து வளர்த்தால்தான் பிள்ளைகள் அறிவுள்ள, ஆற்றல் உள்ள, ஒழுக்கமுள்ள மார்க்க அறிவுள்ளவர்களாக ஆவார்கள். அந்த பிள்ளைகள் தான் குடும்பத்தையும் சமூகத்தையும் முன்னேற்றக் கூடியவர்களாக ஆவார்கள்.


குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் முஸ்லீம் இளைஞர்கள் வேலைக்கு செல்வதால் இந்த சமூகம் முதுகெழும்பில்லாத பாதுகாப்பற்ற சமூகமாக மாற வாய்ப்புள்ளது. சமுதாயத்திற்கு ஒரு ஆபத்து, கலவரம் என்று வந்தால் பாதுகாக்க ஆண்கள் அற்ற அவலநிலை உருவாகின்றது, இந்த அபாயத்தை முஸ்லீம் இனைஞர்களும், மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.


இந்தியாவில் அரசு துறையிலும், தனியார் துறைகளிலும் எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன, இந்தியா என்பது நமது நாடு இந்திய விடுதலைக்காக பெரிதும் பாடுபட்டது முஸ்லீம் சமுதாயம் இங்குள்ள அனைத்து வளங்களும் நமக்கும் சொந்தமானவை, இதை பெறுவதற்கு முறையான கல்வி அவசியம்.


மருத்துவ துறையில் முஸ்லீம்கள் 4.4% தான் உள்ளனர். சங்பரிவாரங்களின் திட்டங்களில் ஒன்று முஸ்லீம் கர்பிணி பெண்களுக்கு தவறான மருந்தை கொடுத்து எதிர்கால முஸ்லீம் சமுதாயத்தை ஊனமுற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும். மேலும் முஸ்லீம்களுக்கு தவறான மாத்திரைகளை கொடுத்து உடல் ரீதியாக அவர்களை பலவீனபடுத்த வேண்டும் என்று ஒரு இரகசிய சுற்றறிக்கையை இந்தியா முழுவதும் அனுப்பியது ஆர்.எஸ்.எஸ். இது சில இடங்களில் நடந்து கொண்டும் இருக்கின்றது. அதிகமான முஸ்லீம் மருத்துவர்களை உருவாக்குவது மிகவும் அவசியமானது.


எனவே முஸ்லீம்களே! விழித்து கொள்ளுங்கள்! இந்த அவலநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் முஸ்லீம்கள் அனைத்து துறைகளிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்தியாவில் தனிமைபடுத்தப்பட்ட சமூகமாவார்கள். படிப்பறிவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல், சமூககட்டமைப்பு இல்லாமல், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இந்த சமூகம் வேட்டையாடப்படும் அபாயம் உள்ளது. எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.


யார் காரணம்?


இந்த அவலநிலைக்கு முஸ்−களை இழுத்து சென்றது எது? யார் இதற்கு காரணம்?


முஸ்லீம் அரசியல் வாதிகள்


முஸ்−ம்களின் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் அரசியல் வாதிகள் இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கரை இல்லாமல் தங்களுடைய சுய லாபத்திற்காக இந்த சமூகத்தை அரசியல் வாதிகளிடம் அடகுவைத்தனர் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சி, இடஓதுகீடு போன்ற சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபடாமல் பெரிய அரசியல் கட்சிகளுக்கு புகழ்பாடி தங்களை மட்டும் வளபடுத்திக் கொண்டனர். கடந்த 60 ஆண்டுகளாக இந்த முஸ்லீம் சமுதாயம் கீழ் நிலைக்கு செல்வதை பார்த்துக் கொண்டிருந்து சிறிதளவும் இதன் வளர்ச்சிகாக சிந்திக்கவில்லை. இன்னும் இவர்கள் இதே நிலையில்தான் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.


இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் :


முஸ்−ம்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக முஸ்−ம்களின் நிதி உதவியால் நடத்தப்படும் மதராஸாகளில் இலவசமாக பயின்ற இந்த ஆ−ம்கள் இஸ்லாமிய வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை, சமூக வளர்ச்சிக்கும் பாடுபடவில்லை ஜும்ஆ மேடைகளில் அவ்லீயாக்களை பற்றியும், தர்ஹா, மவ்லுதுகளை பற்றியும் பேசி தங்களுடைய வயிறுகளை வளர்த்துக்கொண்டார்கள். இன்றளவும் ஆங்கிலம் படிக்க கூடாது, அது ஹாராம் என்று வாதிடும் மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் உள்ள சில கோமாளிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முழுநேரத்தையும், μர்க், பித்அத் கொள்கையை பரப்புவதற்காக செலவழித்து, முஸ்லீம்கள் அல்லாஹ்விடம் கேட்பதை தடுத்து நிறுத்தி இறந்தவர்களிடம் கேட்கசெய்து அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும் ரஹ்மத்திற்கு பதிலாக சாபத்தை பெற உதவினர்.


சமுகத்தில் படித்த கல்வியாளர்கள்


சமுதாயத்தில் படித்து உயர்நிலையில் உள்ள சொற்பமான சிலர் சரியான மார்க்க அறிவில்லாமலும், சமூக வளர்ச்சியில் அக்கரைகாட்டாமலும் சுய நலமாக இருக்கின்றனர், சமூக பணியில் உள்ள கல்வியாளர்களும் தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமை, புகழ், பெருமையின் காரணமாக பிளவுண்டு கிடைக்கின்றனர்.


கல்விக் கூடம் நடத்துபBoldவர்கள்


அரசாங்கத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று கூறி சலுகைகளை பெறும் இவர்கள் முஸ்லீம் மாணவர்களுக்கு எந்த சலுகைகளையும் அளிக்காமல் பகல் கொள்ளை அடிக்கின்றனர். இவர்களுடைய நிறுவனங்களில் முஸ்லீம் ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை ஒரு சில மாணவர்களுக்கு உதவுதாக கணக்குகாட்டி கல்வியை வியாபாரமாக்கி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.


பெற்றோர்கள்


உடனே கிடைக்கும் சிறுலாபத்திற்காக பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்தும் பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திப்பதில்லை, சிறுவயதில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது என்பது அவர்களின் கை, கால்களை வெட்டி ஊனமாக்குவதற்கு ஒப்பாகும். பிள்ளைகளை சம்பாத்திக்கும் இயந்திரமாக கருதி அவர்களின் கல்வி கற்கும் உரிமையை பரித்து எதிர்காலத்தில் அவர்களை வறுமையிலும், அறியாமையிலும் தள்ளுவது அன்பின் அடையாலமல்ல.


ஊடங்கள்

முஸ்லீம்களை தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இந்திய சமூகத்தில் இருந்து முஸ்லீம்களை தனிமை படுத்தி முஸ்லீம்கள் மீது வெறுப்பை இந்த மீடியாக்கள் (பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி) முயன்று வருகின்றன. தொடர்ந்து செய்யப்படும் இந்த பொய் பிரசாரத்தில் முஸ்லீம்கள் மனரீதியாக பலவீனப்படுத்துகின்றனர்.


அதிகாரிகள், அரசியல் வாதிகள்


பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய விரோத போக்கையே கையாளுகின்றனர் இட ஒதுகீட்டை கொடுத்தாலும் கிடைக்காமல் செய்வதற்கான நடைமுறைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறனர். அரசு அதிகாரிகளும் முஸ்லீம்கள் என்றால் ஒரு வெறுப்பு மனப்பாங்கோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.


தீர்வு என்ன?


பல்வேறு முஸ்லிம் அறிஞர்களும், கல்வியாளர்களும் ஆய்வு செய்து பல்வேறு தீர்வுகளை வெளியிட்டுள்ளனர். இருந்தும் இந்த சமுதாயம் இன்னும் பின்தங்கி கொண்டுதான் இருக்கின்றது. இதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வுகளை சொல்லவதுதான். முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும், முஸ்லீம் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் போன்ற தீர்வுகள் உபயோகமற்றது, இப்படி சிலர் முயற்சி செய்து தோல்வியை தழுவி உள்ளனர். தலைவர்களிடம் காணப்படும் பெருமை, ஆதிக்க சிந்தனை, உலக ஆதாயம் போன்றவை ஒன்றுபட விடுவதில்லை.


அப்படிஎனில் இதற்கு தீர்வுதான் என்ன? டி.என்.டி.ஜே மாணவர் அணி நடைமுறைக்கு சாத்தியமில்லாத தீர்வை வழங்காது, எல்லோரும் நடைமுறைபடுத்தக்கூடிய எளிதில் முன்னேற கூடிய தீர்வை பார்போம்.


அனைத்து முஸ்லீம் ஆண்களும், பெண்களும் பட்டம் படிக்க வேண்டும், உயர்கல்வி கற்ற வேண்டும், அரசாங்கம் நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று தேர்ச்சி பெறவேண்டும். படித்து முடித்தவர்களுக்கு வேலை வாங்கி தரவேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியரை கண்டறிந்து, பணகாரர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று அவர்கள் படிப்பை தொடர உதவி செய்ய வேண்டும்.


பெண்கல்விக்கும், கிராமப்புர மாணவர்களின் கல்விக்கும் முக்கியதுவம் கொடுக்க வேண்டும்.


இதை எளிதில் சொல்லிவிடலாம் ஆனால் எவ்வாறு எளிதில் நடைமுறைபடுத்துவது என்பதை காண்போம்.


1. இவை அணைத்தையும் சாதிக்க மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் முறையான வழிகாட்டுதல் இருந்தால் போதும்.


2. இந்த பணியை செய்யக் கூடியவர்கள் அல்லாஹ்வுக்காக மட்டும் பணியாற்றக்கூடிய ஷிர்க் வைக்காத தவ்ஹீத் வாதிகளாக இருந்தால் மட்டுமே அல்லாஹ்வின் உதவியோடு எளிதில் சாதிக்கலாம்.


3. டி.என்.டி.ஜே மாணவர் அணி படிப்பை பொருத்தவரை Prekg முதல் Phd வரை உள்ள பெரும்பாலும் எல்லா படிப்புகளை பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது.


4. வேலை வாய்ப்பை பொருத்தவரை மாதம் ரூ. 8000 இருந்து 8 லட்சம் ரூபாய் வரை இந்தியாவில் சம்பாதிக்க உள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளது.


5. உயர்கல்வி கற்க பணம் அவசியம் இல்லை, அதிக அளவு மதிப்பெண் எடுத்தால் எத்தனையோ பேர் நிதிஉதவி செய்யத்தயாராக உள்ளனர். அதிக மதிப்பெண் எடுப்பது மிக எளிதானதே, இதற்கு அதிக பணம் கொடுத்து பெரியபள்ளி கூடங்களில் படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அரசு பள்ளிக் கூடங்களில் படித்தே மிகஅதிக மதிப்பெண் எடுக்க முடியும். இதற்கு கல்வியை பற்றியை சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும். இந்த நுணுக்கங்களை டி.என்.டி.ஜே மாணவர் அணி நடத்தும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அறிந்துகொள்ளலாம்.


6. முஸ்லிம் மாணவ, மாணவியர்கள் குறைந்த மதிப்பெண் எடுப்பதற்கு அவர்களின் பெற்றோகளின் கல்வி அறிவின்மைதான் காரணம். டி.என்.டி.ஜே மாணவர் அணியில் பங்கு பெருவதின் மூலம் படித்த கல்வியாளர்களைக் கொண்டு முறையான சரியான வழிகாட்டுதல் வழங்குகின்றோம்.


7. படித்து முடித்தவர்கள் வேலை பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள Spoken English, Communication Development போன்ற பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்துகின்றோம்.


8. 10ஆம், +2 தேர்வுக்கு முன்னதாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வழிவகை செய்கின்றோம்.


9. கல்வி கற்பது ஒவ்வொறு முஸ்லிமின் கடமை என்பதை போதித்து மார்க்க ரீதியாக கல்வியின் அவசியத்தை வழியுறுத்துகின்றோம்.


நீங்கள் செய்ய வேண்டியது என்ன?


மேற்சொன்ன காரியங்களை செய்ய பணம் தேவையில்லை உங்கள் ஒத்துழைப்பு போதுமானது உங்கள் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கல்வி வேலைவாய்ப்பு பற்றிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து டி.என்.டி.ஜே மாணவர் அணியை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் வழிகாட்ட தயாராக உள்ளோம்.


மாவட்டம் மற்றும் கிளைதோறும் டி.என்.டி.ஜே மாணவர் அணி இலவசமாக நடத்தும் சிறப்பு பயிற்சி முகாம்கள், வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.


உங்கள் பகுதியில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ, மாணவியர்களை கணகெடுத்து டி.என்.டி.ஜே தலைமைக்கு அனுப்புங்கள்.


உங்கள் பகுதி கல்வியில் மிகவும் பின்தங்கி இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் பகுதியில் முகாமிட்டு சிறப்பு பயிற்சி அளித்து கல்வி வளர்ச்சிக்கு உதவுவோம்.


கல்வியிலும் பொருளாதாத்திலும் முன்னேற பணம் அவசியமில்லை அல்லாஹ் மீது நம்பிக்கையும் ஆர்வமும், கடின உழைப்பும் இருந்தால் போதும்.


மாணவ, மாணவியர்களே உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். உங்களை வளபடுத்திக்கொள்ள நீங்கள் தயாராகுங்கள்.


'''எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன் அறிந்தவன்.' அல்-குர்ஆன்(8:53)



மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்க,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாணவர் அணி


30, அரண்மனைக்காரன் தெரு


மண்ணடி, சென்னை - 600001.


Cell : 9884235802,


E-Mail - tntjedu@gmail.com


Web : www.tntj.net blog : www.tntjsw.blogspot.com

Read more...

வலைப்பதிவு காப்பகம்

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP