திங்கள், 18 மே, 2009

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் ?
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்...)

அன்பு சகோதர சகோதரிகளே "மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்" என்ற தலைப்பில் நமது இனையத்தளத்தில் செய்தி வெளியிடுவதற்க்கு காரணம் கடந்த சில நாட்களாக நமக்கு இமெயில், எஸ்.எம்.எஸ் மற்றும் தொலைபேசி மூலம் வரும் மொட்டை மனிதர்களின் மிரட்டல்களுக்கு பதிலடி தரும் நோக்கத்தோடு தான்.

இப்படி நெஞ்சில் தைரியம் இல்லாத சமுதாய விரோதிகளுக்கு ஒரு எச்சரிக்கையை இதன் மூலம் கூற உள்ளோம்.

கடலூர் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இனையத்தளம் மூலமாகவும் மற்றும் மொபைல் தாவா என்று தொடங்கி எஸ்.எம்.எஸ் மூலமாகவும் சமுதாய தலைவர்கள் என்று பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் தலைவர்களின் இஸ்லாம் மற்றும் சமுதாய விரோத போக்கை மிகவும் வெளிப்படையாக ஏக இறைவனின் உதவியோடு ஆதரத்துடன் தமிழகம் முழுவதும் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது.

இந்த முயற்ச்சி அல்லாஹ்வின் பெரும் உதவியோடும் மக்களின் ஆதரவோடும் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டு வருகின்றது..... அல்லாஹ் அக்பர் புகழ் அனைத்தும் ஏகன் இறைவனுக்கே

இதனால் பயனடையும் மக்கள் பலர் எங்களிடம் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் கருத்துக்களை பார்க்கும் நேரத்தில் இந்த பணியை மேலும் அதிகம் அதிகம் செய்ய வேண்டும் என்ற முயற்ச்சியில் டி.என்.டி.ஜே கடலூர் நகரம் இறங்கியுள்ளது இன்ஷா அல்லாஹ் துவா செய்யவும்....

நாம் ஆதரத்துடன் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விஷயங்களினால் மக்கள் தெளிவடைந்து சமுதய துரோக்கிகளை அடையாளம் காண தொடங்கியுள்ளனர்... இதனால் தங்களின் சாயம் வெளுத்துவிடுமோ என்று கவலைக்குள்ளான சமுதாய விரோதிகளிள் சிலர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒரு விஷயத்தை நாங்கள் இவர்களுக்கு தெளிவு படுத்த விரும்புகின்றோம் அல்லாஹ்விற்க்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படும் நாங்கள் உங்களை போன்ற மனிதர்களுக்கு ஒரு காலமும் பயப்படமாட்டோம் என்பதை உருதிசெய்து கொள்ளுங்கள்.....

மிரட்டல் விடுக்கும் பிணாமிகளே நாங்கள் அல்லாஹ்விற்க்கு மட்டும் அஞ்சும் கூட்டம் உங்களை போன்ற ஊர் பெயர் தெரியாத பிணாமிகளுக்கு அஞ்சுபவர்கள் இல்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்கள் போனில் கூறியதை நேரில் செய்து பாருங்கள் இப்படி கொலைத்தனமாக போனில் மிரட்டினால் நாங்கள் பயப்பட மாட்டோம் எங்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் உண்மை இருக்கின்றது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

இந்த வசனத்தின் அடிப்படையில் நாங்கள் நன்மையை மட்டும் ஏவாமல் தீமையையும் அல்லாஹ்வின் பாதையில் தடுத்து வருகின்றோம். இதனால் எங்கள் உயிர் போகும் என்றால் அதையும் இழக்க தயாராக இருக்கின்றோம் அல்லாஹ்விற்காக.

அல்லாஹ்விற்க்கு சிரிது அஞ்சாமல் தன் வாய்க்கு வந்த தீய வார்த்தைகளை கொண்டு திட்டி எங்களுக்கு வெட்டுவேன் குத்துவேன் என்று கொலை மிரட்டல் விடுக்கும் பினாமிகளே அல்லாஹ்வின் அடியான் பேசினால் நல்லதையே பேசுவன் இல்லையேல் வாய் மூடி இருப்பான் நபி மொழியை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
அடுத்ததாக இப்படி போன் போட்டு மிரட்டும் இவர்கள் தைரியம் இருந்தால் அவர்களின் ஊரையும் பெரையும் சொல்லி மிரட்டட்டும் அப்படி ஊர் பெயர் இல்லாத பினாமிகளாக இருந்தால் மிரட்டுவதை தவிர்க்கட்டும் ஏன் என்றால் கோலை தான் இப்படி ஊர் பெயர் இல்லாமல் மிரட்டுவான்....

கடைசியாக நீங்கள் எப்படி மிரட்டினாலும் நாங்கள் எங்கள் பணியை நிருத்திவிட போவதில்லை அதனால் உங்கள் தொலைபேசி கட்டனங்களை வீணாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்....
நீங்கள் மிரட்டுவது தான் அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த முதல் வெற்றி என்பதை நீங்களே சிந்தித்து உணர்ந்து கொள்ளுங்கள்

அழைப்பு பணியில் என்றும் அன்புடன்
கலீல்லூர் ரஹ்மான்

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP