திங்கள், 25 ஜனவரி, 2010

நேரத்தை நமக்காக பயன்படுத்த வேண்டும் - மாணவர்களுக்கு TNTJ மாணவர் அணி அன்பான அழைப்பு











திருப்பூரில் கடந்த ஞாயிற்று கிழைமை (24/01/10) காலை 10 மணிக்கு TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம் காயத்திரி மஹாலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய TNTJ மாநில மாணவர் அணி செயலாளர் S.சித்தீக்.M.Tech அவர்கள் மாணவர்கள் தங்கள் நேரத்தை தங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.






மேலும் கூறுகையில் மாணவர்கள் தேர்வு காலங்களில் டிவி பார்ப்பது, கிரிக்கெட் பார்ப்பது, பாட்டு கேட்பது, சினிமா பார்பது என தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்குகின்றனர். மாணவர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தை செலவளித்து கிரிக்கெட் பார்பதினால் கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர்.

நம் நேரம் நம்மை வளப்படுத்திகொள்ள பயன்படுத்த வேண்டும், டிவி பார்ப்பது, கிரிக்கெட் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பாட்டுகேட்பதால், கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகர்களும், இசையமைப்பாளார்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். நம் நேரத்தை வைத்து அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் நாம் படிப்பை கோட்டைவிட்டு குறைந்த மதிப்பெண் எடுத்து படிக்க வழியில்லாமல் கல்வி அறிவற்ற சமுதாயமாகி வெளி நாடுகளில் கஷ்ட்டப்பட்டு கொண்டு இருக்கின்றோம்.

மாணவர்கள் தங்களுடைய நேரத்தை தங்களுக்காக பயன்படுத்தினாலே நல்ல மதிப்பெண் எடுத்து குறைந்த செலவில் உயர் கல்வி பெற்று நல்ல வேலையில் அமர்ந்து நம் குடும்பத்திற்க்கும், சமுதாயத்திற்க்கும் பயன் உள்ளவர்களாக ஆகாலாம்.

தானும் தன் சகோதரர்களும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து முழுக்க முழுக்க கல்வியின் மூலமே பொருளாதரத்தில் உயர்ந்ததையும் நினைவு கூர்ந்தார். தானும் தன் சகோதரர்களும் அண்ணா பல்கலைகழகம், IIT போன்ற உயர் கல்வி நிறுவங்களில் உயர்கல்வி (Phd, M.Tech) பெற்றோம். இதற்க்கு பணம் ஒரு போதும் தடையாக இருந்ததில்லை எனவும் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால் கல்வி துறையில் எதையும் சாதிக்கலாம் என குறிபிட்டார். மேலும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி எனவும் விளக்கி கூறினார்.

மதிய அமர்வில் சகோ.கலீல் ரஹ்மான்.M.B.A அவர்கள் மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார், மேலும் மாணவ, மாணவியர் கல்வியில் முன்னேற வழிமுறைகளையும் விளக்கிகூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, சகோ..P.நடராஜ், .உதவியாளர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சகோதரி.ஆ.நூர்மாலிக், ஆசிரியர்.சகோ.முஸ்திரி கானம், ஆசிரியர் சகோ.முரளிதரன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகோ.சதாசிவம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கல்வியாளர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிச்சி அளித்தனர்.

இந்த நிகழ்சிக்கு TNTJ திருப்பூர் மாவட்ட மாணவர் அணிச்செயலாளர் எஸ்.ஷாஹிது ஒலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் A.முகமது சலீம் முன்னிலைவகித்தார். கிளைத்தலைவர் சகோ:பாபு சேட் அவர்கள் வர வேற்புரை நிகழ்த்தினார். கடைசியாக 41.வார்டு கிளைசெயலாளர் சகோ:F.முஹமது உசேன் அவர்கள் நன்றியுரை யாற்றினார் .

பத்திரிக்கையாளர் சகோ.மா.ஜாபர் அலி நிகழ்ச்சியை சிறந்த முறையில் பத்திரிக்கைதுறையினருக்கு எடுத்து சென்றார்.

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP