ஞாயிறு, 12 ஜூலை, 2009


இஸ்லாம் பெண் கல்வியை மறுக்கிறதா?


தினமணி கதிரில் (14.06.2009) 11ம் பக்கத்தில் 'அக்கரைச் சீமை' என்ற தலைப்பில் ராணி மைந்தன் என்பவர் எழுதிதியுள்ளார். அதில் சில விஷமக் கருத்துகளை கூறியுள்ளார். என்னவென்றால் 'தாலிபாகளுக்கு நம்பர் ஒன் எதிரி பெண் கல்வி' என்றும் பெண் கல்வி கூடாது என்று தாலிபான்கள் சொல்லக் காரணம் இது இஸ்லாமிய நெறி முறைகளுக்கு முரணானது என்று நினைப்பது தான் என்றும் தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தினமணியின் அறியாமையைத்தான் காட்டுகிறது. குர்ஆனின் முதல் வேத வெளிப்பாடான வசனமே 'இக்ராஹ்'. படிப்பீராக, கற்பீராக, ஓதுவீராக என்று தான் துவங்குகிறது. கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் வேதம் இஸ்லாம்தான். ஆண்களே கற்பீறாக என்றோ, பெண்களே கற்காதீர்கள் என்றோ இஸ்லாம் கூறவில்லை. அப்படி இருக்கும்போது பெண்கள் கல்வி கற்ப்பது இஸ்லாமிய நெறிமுறைக்கு முரணானது என்று கூறும் தினமணி அதன் அறிவின் வரட்சியை வெளிக்காட்டுகிறது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிபுரிந்த போது போதைப் பொருள் உற்பத்தியை முற்றிலுமாக ஒழித்து கட்டியதற்காக ஐ.ந. சபையின் பாராட்டுதலைப் பெற்றிருந்தது என்பதை தினமணி மட்டுமல்ல வேறு யாரும் மறுக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் குற்றங்கள் ஒழுக்கக்கேடுகள் குறைந்திருந்ததையும் மறுக்க முடியாது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து மேலை நாட்டு அரைகுறை ஆடைகளுடன் படிப்பதை தான் தாலிபான்கள் வெறுக்கின்றனர். உலக முஸ்லீம்கள் மத்தியில் தாலிபான்கள் மீது வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்காவின் தலையீட்டை ஆப்கானிஸ்தானில் தொடர வேண்டும் என்பதற்க்காகவும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஆப்கன் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காகவும், அமெரிக்க ஏஜெண்டுகள் இது போண்ற கீழ்த்தரமான காரியங்களை செய்து விட்டு தாலிபான்கள் மீதும், அல்காயிதா மீதும் பழி போட்டு கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் பெண் கல்வியை எதிர்ப்பது போண்று எழுதப்பட்ட செய்திதான் இப்போது பிரச்சினையே! ஆணும், பெண்ணூம் இரண்டறக் கலந்து கற்க வழி வகுக்கக்கூடாது; அப்படி செய்தால் பல விதமான ஒழுக்க கேடுகள் அதாவது திருமணத்திற்க்கு முன்பே உடலுறவு வைத்து பிள்ளையைப் பெற்றெடுப்பது, பெண்கள் ஓடிப்போவது, தற்க்கொலை செய்து கொள்வது போன்ற கேடுகள் விளையும்.

எனவே ஆண், பெண் சேர்ந்து பயிலக்கூடது என்று தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது என்பதை கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

தாலிபான்கள் பாகிஸ்தானில் அவர்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஜிஸ்யா வரி வசூலிப்பதாக வந்த செய்தியை கூட பாகிஸ்தான் ஹை கமிஷன் மறுத்துள்ளது.


‍எம்.ஏ.ஹாஜி முஹ்ம்மது, நிரவி

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP