திங்கள், 11 மே, 2009

மாணவர்களுக்கான விழிப்புணர்வு செய்தி ?


நீங்கள் பூமியில் பரவி அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்!. திருக்குர்ஆன் 62:10

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் என்ஜினியரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கத் தொடங்கி விட்டனர் அதற்கான முழு விபரத்தை அறிய கீழ்காணும் லிங்கை சொடுக்கிப் பார்வையிடவும்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=485977&disdate=5/6/2009

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தேர்தல் நெருங்கி விட்டதால் தேர்தலுக்கானப் பணியில் மும்முரமாக ஈடுபடும் பிஸியில் பிள்ளைகளின் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விடாதீர்கள்.

இந்த மாத இறுதி 30 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்திருக்கின்றார்கள்.

புறப்படுங்கள் வறுமையை துடைத்தெறிவதற்கு



இன்று உலகம் முழுவதும் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய சமுதாயமாக நாம் இருக்கின்றோம் படித்து விட்டு கை நிறைய சம்பாதிக்க முடியாதக் காரணத்தினால் சில நேரங்களில் விரக்தி அடைந்து தவறான வழியில் பெருளீட்டும் மோசமான நிலைக்கும் தள்ளப்படுகின்றோம் இன்றும் தமிழகத்தில் இறைவன் தடைசெய்த வட்டித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பிரபல முஸ்லீம் ஊர்கள் இருக்கவேச் செய்கின்றன. முறையாகப் படித்து கைநிறைய ஊதியம் பெற்றால் தவறான வழியில் பொருளீட்டும் அவசியம் வரவே வராது.


ஒருவர் தமக்குரிய உரிமைகளைத் தேடும்போது அதை முறையாகத் தேடட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி இக்கின்றார்கள் .புகாரி 2076

இயற்கை வளம் கொழிக்கும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த நாம் முறையாக பொருளீட்ட வேண்டும் என்றால் இரண்டே வழிகள் தான் இருக்கின்றன ஒன்று படித்து விட்டு இந்திய அரசு அதிகாரிகளாக ஊழியம் செய்து கைநிறைய ஊதியம் பெற வேண்டும், அதற்கடுத்து தொழில் துறைகளில் முன்னேற வேண்டும் இவை இரண்டுக்குமே படிப்பு இன்றியமையாததாகும்.

பாஸ்போட் மோகத்தை கை கழுவுங்கள்.
கடந்த காலங்களில் 10, அல்லது 11, 12 வரைப் படித்து விட்டு அயல்நாடு சென்று பிழைப்பு தேடுவதற்காக பாஸ்போர்ட் அப்ளை செய்தோம் இனிவரும் காலங்களில் அதை கை கழுவி விடுவோம்.

காரணம் இன்று நாம் கடுமையாகப் போராடி அரசாங்கத்திடமிருந்து குறைந்த பட்ச இடஒதுக்கீட்டை அடைந்திருக்கின்றோம் இன்னும் தொடர்ந்து முயற்சி செய்து விகிதாச்சார அடிப்படையில் முறையான இடஒதுக்கீட்டை அடைந்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் அதையும் அடைந்து கொள்வதற்காக வல்ல இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம் இறைவன் நிறைவேற்றித் தருவான்.

மேற்காணும் இடஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவதற்கு அதற்கானப் படிப்பும், சான்றிதழும் அவசியம் தேவை என்பதை நாமறிந்து வைத்திருக்கின்றோம் அதனால் மேற்காணும் அண்ணா பால்கலைக்கழக விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உயர் கல்விப் பயிலுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

பிள்ளைகள் அதிகமான மார்க்குகள் எடுப்பதற்கு ஆர்வமூட்டுங்கள் படிப்பிற்கு தடையாக வீட்டில் இருக்கக் கூடிய பொழுது போக்கு அம்சங்களை தடுத்துக் கொள்ளுங்கள். ( நியூஸ், பயான் போன்ற நிகழ்ச்சிகளுக்காக குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்குங்கள் )

விரக்தி அடையாதீர்கள்
சிறு வயதில் சிலப் பிள்ளைகள் விளையாட்டில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள் படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் அதை மட்டும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இவன் மேல்படிப்பில் கோட்டை விட்டு விடுவான் இவனை நம்பி பெரிய தொகையை செலவிட முடியாது என்று ஆரூடம் கூறி பிள்ளைகளுடைய எதிர் காலத்தை தொலைத்து விடாதீர்கள்.

சிலக் குழந்தைகள் சிறு வயதில் அவ்வாறு படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டில் கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பவர்கள் கல்லூரிப் பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்தி சாதனைப் படைக்கக் கூடியவர்களாக மாறி விடுவார்கள் குழந்தைப் பருவத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வாலிபப் பருவத்தை கணிக்காதீர்கள் நமது கணிப்பு எப்பொழுதுமே பிழையானது விதியின் அமைப்பே உறுதியானது.

ஏழ்மை தடை இல்லை
நாம் ஏழையாக இருக்கின்றோம் நம்முடையப் பிள்ளகளை அதிக செலவு செய்து படிக்க வைக்க இயலாது என்றெண்ணி விரக்தி அடைந்து மேல்படிப்புக்கான முயற்சியை கை விட்டு விடாதீர்கள்.

அதேப் போன்று நமது பெற்றொர் ஏழையாக இருக்கின்றனர் அதனால் நாம் விரும்புகின்ற துறையில் படித்து முன்னேற முடியாது என்றெண்ணி மானவர்கர்கள் விரக்தி அடைந்து விடாதீர்கள்.

நாம் விரும்புகின்ற துறையில் படித்து முன்னேற முடியும் என்ற வேட்கை ஒவ்வொரு மானவனுக்கும் வரவேண்டும் அவ்வாறு வந்து விட்டாலேப் போதும் அதற்கு பெருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதற்கு சமீபத்தில் ஏழை தாய் தகப்பனுக்குப் பிறந்து ஐ.ஏ.எஸ் ஸில் தேர்வு எழுதி வென்ற வீரபாண்டியன் அவர்களின் விடா முயற்சி ஒருப் பெரிய எடுத்துக் காட்டாகும். நல்வழியில் முன்னேற வேண்டும் என்று நினைத்த எவரும் சருக்கியதாக வரலாறேக் கிடையாது.

மார்க்க அறிவுக்கும் தடை இல்லை.
எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்காக முழு நேரத்தையும் செலவிடுவதால் மார்க்க கல்விப் பயில முடியாத நிலை எற்படுமே என்றெண்ணி அஞ்ச வேண்டாம் எந்த நிலையிலும் அதனால் பின்னடைவு ஏற்படாது.

எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில் நுட்ப கல்வி கற்பதற்காக முழு நேரத்தை செலவிட்டாலும் தொழச் செல்வதற்கு எந்த கல்லூரியிலும் தடை கிடையாது, அவ்வாறு தடைவிதிக்கப் பட்டாலும் கிளாஸ் நடக்கும் வரை தான் தடுக்க முடியும், கிளாஸ் முடிந்தப் பிறகு அதற்கு முன் லஞ்ச் டயம் போன்ற இடைவேளையின் போது முஸ்லீம் மானவர்கள் இணைந்து ஜமாத்தாக தொழுது கொள்ள முடியும், விடுமுறை நாட்களில் மார்க்க அறிவை தேடிக் கொள்ள முடியும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

''அன்றைய மக்கள் கொடுக்கல், வாங்கலும் வியாபாரமும் செய்து வந்தார்கள். ஆயினும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய ஒரு கடமை அவர்கள் முன்னே வரும்போது அதை நிறைவேற்றி முடிக்கும் வரை அவர்களின் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அவர்களை திசை திருப்பவில்லை!'' என்று கதாதா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். புகாரி 2059

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் மாணவரணி உருவாக்கப்பட்டு அவர்கள் மாணவர்களிடத்தில் சென்று கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதுடன் கல்லூரி விடுதிகளில் சென்று பயான் செய்யவும் செய்கின்றனர். மேற்காணும் அரும் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும், அதிகபட்சம் பட்டதாரிகளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tntj.net/Adds/Advt_ManaverAni_Porgram_12-4-2009.asp

http://tntj.net/Adds/Advt_ManaverAni_Porgram_Nagoor_Valuthoor_Karaikkal_Kovai_Aanaimalai_Maduravayal.asp

http://tntj.net/Event/Sivagangai/Ilyangudi_Kelvi_Mugam_8-2-2009.asp

http://www.tntj.net/Event/Krishnagiri/Kelvi_Mugam_12-4-2009.asp

வேலை செய்து கொண்டு, அல்லது படித்துக் கொண்டே அவர்களது ஓய்வு நேரங்களில் இந்த மனிதாபிமான சேவையை இளைய தலைமுறை மானவர்களுக்காக செய்து வருகின்றனர்.

5:119... அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

மார்க்கம் பயிலுவதற்கும் அதைப் பரப்புவதுதற்கும் மருத்துவம், எஞ்சினியரிங் போன்ற தொழில் நுட்பக் கல்விப் பயிலுவது எந்த வகையிலும் தடையாக இருக்காது,

அதனால் தேர்தல் நெருங்கி விட்டதால் தேர்தலுக்கானப் பணியில் மும்முரமாக ஈடுபடும் பிஸியில் பிள்ளைகளின் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விடாதீர்கள்.

இந்த மாத இறுதி 30 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்திருப்பதால் காலதாமதம் செய்யாமல் பிள்ளைகளை உயர் கல்விப் பயில கல்லூரிகளில் சேர்ப்பதற்கு தயாராகுங்கள். இல்லை என்றால் இடஒதுக்கீடுப் பெற்று அரத்தமில்லாமல் போய்விடும்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Read more...

சனி, 9 மே, 2009


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள தேர்தல் நோட்டிஸுகள்:




1. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக..
Page-1
Page-2

2. தமுமுக அன்று சொன்னது என்ன?
Page-1
Page-2

3. திமுக வை ஏன் ஆதரிக்க வேண்டும்?
Page-1
Page-2

4. மமக என்ற தமுமுக விற்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?
Page-1
Page-2
Page-3
Page-4

Read more...

சந்தனமாக்கப் போனது சாக்கடையானது!



அரசியலை சந்தனம் ஆக்கப்புறப்பட்டோர் வெகுவிரைவிலேயே சாக்கடையானதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.
மானம் காக்க புறப்பட்ட மம கட்சி மானம் இழந்து நிற்கும் காட்சி



தினமணி (9-5-2009) பத்திரிக்கையில் வெளியான செய்தி




ஏகத்துவம் வேடம் போடும் இவரை இனி ஏகத்துவ வாதிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளுவார்கள்

Read more...

செவ்வாய், 5 மே, 2009

Align Center

தங்கள் ஊர்களில் தேர்தல் பிரசாரத்திற்காக விநியோகிக்க வேண்டிய துண்டு பிரசுரங்கள்

Click here to download Page 1

Click here to download Page 2

நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான பி.ஜே அவர்களின் பேட்டி

முழு விபரம் >>

நேர்காணல் என்ற போர்வையில் அரங்கேறிய நாடகம் !

(இரண்டாம் பாகம்)

சுனாமி திருடர்கள்
"அடுத்ததாக உங்களுக்கு சுனாமி திருடர்கள் என்ற ஒரு பெயர் உள்ளதே ! " என்று கேள்வி கேட்க திருடியவந்தான் திருடன் திருடன் என்று கத்துவான். நாங்கள் மக்கள் மன்றத்தில் கண்க்குகளை படம் ஒட்டிக் காண்பித்துவிட்டோம் என்று 'படம் ' காட்டினார்.
மொத்த வரவு 68 லட்சம் செலவு 33 லட்சம் மீதி இருப்புத் தொகை 35 லட்சம். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூலிக்கப்பட்ட தொகையில் 35 லட்சம் ரூபாயை செலவழிக்காமல் நீங்கள் இருப்பு வைக்க அதிகாரம் கொடுத்தது
யார் ? மீதி இருந்த 35 லட்சத்தை என்ன செய்தீர்கள் ? இதுவரை கணக்கு காட்டினீர்களா ? ( ஏற்கெனவே காட்டியது போன்று கள்ளக் கணக்காவது காட்டியிருக்கணுமா ? இல்லையா ?
பேரிடர் பாதுகாப்பு மையம் கட்டப் போகிறார்களாம் ! ஒரு திறந்த பொட்டல் வெளியில் ஒரு பெரிய தகரத்தை ஊன்றி திறந்து வைத்துவிட்டு 35 லட்சம் தீர்ந்து போய் விட்டது என்பது தான் நீங்கள் காட்டும் கணக்கா ?
மாறாக டி.என்.டி.ஜேவை திருடன் என்று சொல்கிறீர்களே.... டி.என்.டி.ஜே வை விமர்சனம் செய்யும் அத்தனை இயக்கங்களையும் பட்டியல் போட்டு அவர்களது அவர்களது விசாரனைக்குத் தயார் என டி.என்.டி.ஜே மற்றும் தமுமுக சுனாமி மற்றும் ஃபித்ரா வசூலை விசாரனை செய்ய முன் வந்தார்களே, நீங்கள் ஏன் ஓடி ஒளிந்தீர்கள் ?
டி.என்.டி.ஜே சுனாமியில் திருடியிருந்தால் நீங்கள் நிருபிக்க சரியான வாய்ப்பாக அது அமைந்ததே ! ஏன் முன் வரவில்லை ? ஏனெனில் நீங்கள் தான் திருடர்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
தனது தணித்தன்மையை பறைசாற்றிய டி.என்.டி.ஜே சுனாமி வரவு செலவை பகிரங்கமாக ' உணர்வு ' இதழில் வெளியிட்டது.
மொத்த வரவு 75,98,385 செலவு 75,98,385 மீத இருப்பு 00,00,000 என்று கணக்கை வெலியிட்டு தனது தூய்மையை நிருபித்தது. இனிமேல் வரவிருக்கும் சுனாமிக்கு இப்போதே பேரிடர் பாதுகாப்பு மையம் அமைக்க போகிறோம் என்று டி.என்.டி.ஜே சீன் காட்டவில்லை. இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் பெரும் பணத்தை திருடிவிட்டு திருடன் திருடன் ! என்ற சப்தம் போடாமல் கமுக்கமாக செல்லும் சுனாமி திருடர்கள் நீங்கள் தான் என்பதை நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் !
ஃப்த்ரா வசூலில் நீங்கள் திருடியதையும் குற்றச்சாட்டாக வைத்தோமே அதை பற்றி வாய் திறக்காதது ஏன் ?

கடைந்ந்தெடுத்த சந்தர்ப்பவாதம்

திமுக மணல் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று தற்போது அவர்களது துண்டு பிரசுரங்களிலும், இனையத்தளத்திலும் பாலம் கட்டுவதில் ஊழல், சாலை போடுவதில் மோசடி, அனைத்து காண்ட்ராக்ட்களிலும் 14 சதவிகிதம் லஞ்சம் என்று திமுகவினர் மீது குற்றம் சாட்டும் இவர்கள் இத்தனை காலமாக நீங்கள் கூட்டனியில் தானே இருந்தீர்கள் அப்போது சொல்லாமல் இப்போது ஏன் சொல்கின்றீர்கள் என்ற நியாயமான கேள்விக்கு இவர்கள் வைத்திருக்கும் ரெடிமேட் பதிலையும் அந்த நேர்காணல் நாடகத்தில் அவிழ்த்துவிட்டார்.
"மணலை கொள்ளையடிக்கிறார்களே இதுவெல்லாம் தவறு என்று ஸ்டாலினிடம் நான் நேரிலேயெ தெரிவித்துள்ளேன். வீரபாண்டி வீட்டில் போய் தெரிவித்துள்ளேன் " என்று கேட்பவர்கள் காதில் பூ சுற்றுகிறார். இதை ஏன் இப்போது வெளியில் சொல்கிறார்கள் தெரியுமா ? இதை ஏன் தற்போது மேடைகளில் பேசுகிறார்கள் தெரியுமா ? இதை ஏன் தற்போது இனையத்தளதில் போடுகிறார்கள் தெரியுமா ? இவர்கள் கேட்ட இரண்டு எம்.பி சீட் எலும்புத் துண்டு போடாததால்தான்.
இந்த இரண்டு சீட் எலும்பு துண்டை திமுகவினர் இவர்களுக்கு வீசி இருந்தால் இந்த குற்றச்சாட்டுக்ளை எல்லாம் ஸ்டாலினிடமும், வீரபாண்டி ஆறுமுகத்திடமும் காதில் போய் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
ஒருவேளை அதிமுக கூட்டனியில் இவர்களுக்கு சீட் ஒதுக்கி இடம் கொடுத்திருந்தால் தேர்தலுக்கு பிறகு அதிமுக பி.ஜே.பி யை ஆதரிக்கும்போது கேட்டால் ஜெயலிதாவிடம் நேரில் சொல்லிவிட்டேன் என்று ரெடிமேட் பதிலை அப்போதும் அவிழ்த்துவிடுவார்கள். இது எவ்வளவு பெரிய கடைந்தேடுத்த சந்தர்ப்பவாதம் என்பதை முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வாரியப் பதவியில் ராஜினாமா செய்தது தியாகமா ?

அந்த நேர்காணலில் வாரியப் பதவியை ராஜினாம செய்தது பெரிய தியாகம்போல அதை ஹைதர் அலி சித்தரித்தார்.
அது தியாகமல்ல என்பதையும் அவரே விளக்கிவிட்டார். கலைஞர் பி.ஜே.பி யுடன் கூட்டனி வைத்தபோது அப்போது வக்ஃப்பு வாரியத் தலைவராக இருந்த லத்தீப் அவர்கள் வக்ஃப்பு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லையாம்.
உடனே அவர்மீது வீண் பழி சுமத்தி கலைஞர் வக்ஃப்பு வாரியத் தலைவர் பதவியை பிடுங்கினாராம். அதுபோல தனக்கு நேர்வதற்க்கு முன்னால் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் என்றுதான் தனது பதவியை ராஜினாமா செய்ததற்க்கான காரணத்தை ஹைதர் அலி தெளிவுபடுத்தினார்.
தன் பதவியை பிடுங்கி விடுவார் என்பதை தெரிந்து கொண்டு பதவியை பறிப்பதற்க்கு முன்னரே பதவியை துறப்பதுபோல் ராஜினாமா நாடகம் ஆடி அதை தற்போது தியாகம் என்று சொல்வதும் பதவியை துச்சமாக மதித்து தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறோம் என்பது மக்களை மடையர்களாக்கும் செயல்.
நீங்கள் தூக்கி எறியாவிட்டால் அவர்கள் உங்களை தூக்கி எறிந்திருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை! இப்படி செய்தது தியாகமல்ல ! ஒரு நல்ல நரித்தனம்.

வெளிச்சத்திற்க்கு வந்த உண்மைகள்

ஆகமொத்தத்தில் நேர்காணல் என்ற போர்வையில் இவர்கள் நடத்திய நாடகத்தின் எண்ணற்ற உண்மைகள் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளன. கடந்த தேர்தலில் இவர்கள் நிறுத்தச் சொன்ன நபரை வேட்பாளராக நிறுத்தாததால் தான் முஸ்லீம் லீக்கிற்க்கு கிடைத்த பாளையங்கோட்டை பறிபோனது. அதற்க்கு நாங்கள் தான் காரணம் என்பதும் கடந்த தேர்தலில் திமுகாவை ஆதரிக்க வக்ஃப்பு வாரியத் தலைவர் பதவியை பேரம் பேசிவிட்டுதான் ஆதரித்தோம் என்ற உண்மையும் இவ்வளவு நாள் பாக்கர் எதிரணியில் இருந்தபோதும் எனக்கும் அவருக்கும் சுமூகமான (கள்ள) உறவு இருந்து வந்தது என்று ஹைதர் அலி கூறியதும், இப்போது இவர்கள் செய்த அத்தனை அட்டூழியங்களையும் இந்த பொய்யன் டி.ஜே ஆமோதிக்கின்றது என்ற உண்மயை வெளிவந்துள்ளது. அல்லாஹ் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.


-- அபூ நஸ்ரின், மதுரை

Read more...

திங்கள், 4 மே, 2009



ஏக இறைவனின் திருப்பெயரால்....
மார்க்கம் நலன் நாடுகிறது, யாருக்காக? என நாங்கள் வினவினோம், அப்போது நபியவர்கள், அல்லாஹ்விற்காகவும், அவனது வேதத்திற்காகவும், அவனது தூதருக்காகவும், முஸ்லிம் தலைவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் என்று நபி(ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள்.
அறிவிப்பாளர்: தமீமுத்தாரீ நூல்: முஸ்லிம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
தேர்தல் நெருங்கி விட்டது ஒவ்வொரு ஜனநாயக நாட்டின் குடிமகனுக்கும் வாக்களித்து ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு.

அதனடிப்படையில் இந்திய முஸ்லீம்களாகிய நமக்கும் இந்தியப் பெருநாட்டின் ஆட்சியாளர்களை வாக்களித்துத் தேர்வு செய்யும் உரிமை உண்டு அதனால் நாம் ஒவ்வொருவரும் பன்முகத் தன்மைக் கொண்ட இந்தியப் பெருநாட்டை ஓரளவுக்காவது நடுநிலைத் தன்மையுடன் ஆளக் கூடிய ஆட்சியாளரை இன்ஷா அல்லாஹ் வாக்களித்து அமரச் செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செய்லபடுவோம்.

நாமே நின்று ஏன் வெற்றி பெறக் கூடாது ?

நாமே வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாவதை மார்க்கம் தடை செய்ய வில்லை.

ஆனால் சிறுபான்மை சமுதாயமாகிய நம்மால் தனித்து நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆக முடியாதவாறு நமக்கு ஏற்கனவே ஒதுக்கப் பட்டிருந்த ரிசர்வ் தொகுதி முறை பறிக்கப்பட்டு விட்டது அதனால் நம்மால் தனித்து நி;ன்று வெற்றிப்பெற்று சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக முடியாது.

இந்தியாவின் பெரும்பாண்மை சமுதாயமாகிய ஹிந்து மக்களே மேற்காணும் பொறுப்புகளில் வர வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டி சிறுபான்மை முஸ்லீம்களுக்கான ரிசர்வ் தொகுதி முறையை ரத்து செய்து விட்டனர்.

அதனால் மேற்காணும் தனித்து நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராகும் திட்டத்தை மீண்டும் ரிசர்வ் தொதியைப்போராடிப் பெறும் வரை கை விட்டு விட வேண்டும். அதுவரை நமது வாக்குகளை சிதற விடக்கூடாது.

பெரும்பாண்மை சமுதாயமாகிய ஹிந்து மக்களே மேற்காணும் பொறுப்புகளில் வரமுடியும் என்ற நிலை இருப்பதால் அவர்களில் எந்த ஆட்சியாளர் சிறுபான்மை சமுதாயமாகிய நமக்கு வாழ்வாதார வசதிகளை ஓரளவாவது செய்து கொடுக்கின்றார்களோ, அவர்களுக்கு நம்முடைய வாக்குகளை அளித்து ஆட்சிக்குக் கொண்டு வரவேண்டும், எந்த ஆட்சியாளர் நமது வாக்குகளைப பெற்றுக் கொண்டு நமக்கு வாழ்வாதார வசதிகளை செய்து தர மறுக்கின்றனரோ அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர விடாத அளவுக்கு நம்முடைய வாக்குகளை எதிரணிக்குப் செலுத்தி அவர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும்.

இதல்லாமல் வேறு எந்த வழியை தேர்வு செய்தாலும் நம்முடைய வாக்குகள் சிதறி நமக்குப் பெரும் பிண்ணடைவை ஏற்படுத்தும்.

இன உணர்வைத் தூண்டி ஆதாயம் அடைய நிணைக்கும் வேட்பாளர்கள்.

ரிசர்வ் தொகுதி போனால் என்ன வெற்றிப்பெறும் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர்கள் மூலமாக சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் n;சன்று சமுதாயத்திற்காக குரல் எழுப்பலாமே என்ற இஉ உணர்வைத் தூண்டி சில வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள்.

சமுதாய உணர்வைத் தூண்டிவிட்டு உள்ளே செல்ல நிணைப்பவர்கள் தங்களுக்கிரும் பதவி ஆசையினால் அவ்வாறு ஆசைவார்ததைக் காட்டுவார்கள் ஆனால் அது சாத்தியப் படாது என்பது அவர்களுக்கேதெரியும்.

கூட்டணிக் கட்சிக் காரர்கள் ஒரு சீட்டை மட்டும் காட்டி மொத்த சமுதாய ஓட்டு;க்களை அறுவடை செய்வார்கள் அதனால் அவர் ஒருவர் மட்டும் உறுப்பினராகி பயன் பெறுவார் அதனால் மொத்த சமுதாயத்திற்கு ' 0 ' தான் பலனாக அமையும் காரணம் இவர் தன்னுடைய விருப்பத்திற்கு கூட்டணிக் கட்சி தலைவரிடம் அனுமதிப் பெறாமல் எதையும் பேச முடியாது, அவ்வாறுப் பேசினாலும் ஒன்றிரெண்டுப் பேர் என்பதால் முதல்வர் மற்றும் அவை உறுப்பினர்களுடைய கவனம் அதனால் ஈர்க்கப்படாது.

இதையும் மீறி ஒரு முஸ்லீம் நிற்கின்றார் என்று இன உணர்வின் அடிப்படையில் வாக்களித்தால் அந்த வாக்குகள் சிதறும் அதன் பிறகு நம்முடைய சமுதாயத்திற்கு நன்மை செய்த ஆட்சியாளரை நமது ஓட்டுகளைக் கொண்டு வெற்றி பெறச் செய்ய முடியாத நிலை எற்படும்.

அனைத்து வேட்பாளர்களுக்கும் அவர்களது தொகுதியில் எந்த சமுதாய மக்களிடத்திலிருந்து எத்தனை எத்தனை சதவிகிதம் ஓட்டுக்;கள் கிடைத்தது என்று துல்லியமாகத் தெரியும் அதனால் அவரிடமிருந்து மீண்டும் நமக்குத் தேவையான சலுகைகளை கேட்டுப் பெற முடியாத நிலை ஏற்படும் .

அதனால் இன உணர்வின் அடிப்படையில் வாக்களிக்க முயற்சிக்காதீர்கள்,

இரத்தத்தில் ஊறிப் போனக் கட்சி என்று நினைத்தும் வாக்களித்து வாக்குகளை சிதறச் செய்யாதீர்கள்,
சிறுபான்மை சமுதாயமாகிய நமக்கு எந்த ஆட்சியாளர் வாழ்வாதார வசதிகள் செய்து கொடுத்தார்களோ, நமது கோரிக்கையை ஓரளவாவது ஏற்று நடைமுறைப் படுத்தினாரோ அவருக்கு வாக்களித்து அவரை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

இன உணர்வைத்தூண்டி பதவி சுகம் அனுபவிக்கத் துடிக்கும் மமக.

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் பதவியின் மீது தனிப்பட்ட ஆசைக்கொண்டு புறப்பட்டிருக்கும் மமக சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் சென்று குரலெழுப்பினால் தான் முஸ்லீம் சமுதாயத்திற்கு சலுகைகளைப் பெறமுடியும் என்றுக் கூறுகின்றார்கள்.

தனித்து நின்று, தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, தனிப் பெரும்பான்மையுடன் சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் செல்ல முடியாது என்று அவர்களுக்கேத் தெரியும் அதற்காகத் தான் இந்த முறை அவர்கள் கூட்டணிக்காக ஏறி இறங்காத கட்சித் தலைவர்கள் வீடே இல்லை என்று சொல்லலாம் .

நாம் அவர்களிடம் கேட்போம்.

சமீபத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு தமிழக சட்டமன்றத்தில் எத்தனை முஸ்லீம் எம்.எல்.ஏக்கள் குரலெழுப்பிக் கிடைத்தது ? இதற்கு அவர்களிடத்தில் பதில் உண்டா ? எம்.பி பதவி ஆசையைத் தவிற இன உணர்வைத் தூண்டி ஓட்டு வேட்டையாட இருப்பதற்கு வேறு என்னக் காரணம் அவiர்களிடம் இருக்கு முடியும். ?

பதவி சுகத்திற்காக இரட்டை வேடமிடும் மமக.

முஸ்லீம் சமுதாயத்திற்கு குரலெழுப்புவதற்காக மட்டுமே மமக உருவாக்கப்பட்டதென்றால் அதிலாவது அவர்களிடத்தில் உறுதி இருக்கிறதா ? என்றால் அதுவும் இல்லை !

முஸ்லீம்களை சந்திக்கும் பொழுது நம்முடைய சமுதாயத்திற்காக, அவர்களுடைய கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக, அவர்களைப் பொருளாதாரத்தில் முன்N;னற்றி விடுவதற்காக, அவர்களுடைய வறுமையை துடைத்தெறிவதற்காக புறப்பட்டிருக்கி;ன்றோம் என்றுக் கூறுவார்கள்.

மற்ற சமுதாயத்து மக்களை சந்திக்கும் பொழுது அனைத்து சமுதாய மக்களுடைய கல்வி அறிறை, மேம்படுத்துவதற்காக, அவர்களைப் பொருளாதாரத்தில் முன்N;னற்றி விடுவதற்காக, அவர்களுடைய வறுமையை துடைத்தெறிவதற்காக புறப்பட்டிருக்கி;ன்றோம் என்றுக் கூறி பல்டி அடிப்பார்கள்.

முஸ்லீம்கள் மட்டும் ஓட்டுப் போடுவதினால் மட்டும் வெற்றிப் பெற முடியாது என்று அவர்கள் நன்றாக அறிந்திருந்தக் காரணத்தால் ஆரம்பத்திலேயே அவர்களுடைய அமைப்பிற்கு வித்தியாசமாக '' மனித நேய மக்கள் கட்சி '' என்று பொதுவானப் பெயரைச் சூட்டி கட்சிப் பெயரில் கூட முஸ்லீம் என்ற வார்த்தை வராமல் புத்திசாலித் தனமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

நாம் இதை கற்பனையாக எழுத வில்லை கீழேப் படியுங்கள் மமக உருவாக்கப்பட்டது முஸ்லீம் சமுதாயத்தை மேம்படுத்தவா ? அல்லது மமக நிர்வாகிகளை மேம்படுத்தவா ? என்பதை விளங்கிக் கொள்வீர்கள்.

அனைத்து சமுதாய மக்களுக்கும் வட்டி இல்லாமல் கல்விஇ மருத்துவ கடன்வசதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வாக்குறுதி

ராமநாதபுரம் ஏப்.15-

தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து சமுதாய மக்களுக்கும் வட்டி இல்லாமல் கல்விஇ மருத்துவ கடன் வசதி செய்து தரப்படும் என்று ராமநாதபுரம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.

வேட்பாளர்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளராக சலீமுல்லாகான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் த.மு.மு.க.வின் மாவட்ட செயலாளராக உள்ளார். த.மு.மு.க. மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் கல்விஇ சமூக சேவைஇ அம்புலன்சு வசதி மற்றும் ரத்ததான முகாம் நடத்தி வருகிறார். அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது -

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய இயக்கமாக விளங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய தேவையான அனைத்து திட்டங்களையும் அனைவரின் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற பாடுபடுவேன். ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமான வைகை தண்ணீர் முறையாக வந்து சேர வைகை ஆற்று பகுதியில் சிமெண்டு கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.

நீர்த்தேக்கம்
வெள்ளக் காலங்களில் வைகையில் இருந்து கடலுக்கு சென்று வீணாகும் தண்ணீரை தேக்கி வைக்க ராமநாதபுரம் பெரிய கண்மாய் மற்றும் சக்கரக்கோட்டை கண்மாய்களை ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்ற அரசிடம் வலியுறுத்துவேன். இதேபோல ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை சீரமைக்கவும்இ திருச்சுழி பகுதியில் கிருதுமால் நதி திட்டத்தை செயல்படுத்தவும் பாடுபடுவேன். ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலில் நிம்மதியாக மீன்பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். மாவட்டத்தில் தொழில் வளம் வேலைவாய்ப்பு பெரு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

கல்விகடன்
தொகுதியில் உள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு கல்விக்கடன் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் மருத்துவ கடன் வட்டி இல்லாமல் வழங்க மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினத்தந்தி

இதைப் படித்தப் பிறகும் கூட யாராவது ஒருவர் மமக அமைப்பை முஸ்லீம் சமுதாயத்திற்கு மட்டும் குரல் கொடுக்கும் அமைப்பு என்று எண்ணி தங்களை பிறருடன் தேவை இல்லாத வாக்கு வாதத்தில் ஈடுபடுத்தவோ, தங்களுடைய வலிமை வாய்ந்த வாக்குகளை அவர்களுக்காக இன உணர்வின் அடிப்படையில் இட்டு வீணடிக்கவோ விரும்ப மாட்டார்கள்.

மேற்காணும் அவர்களுடைய திட்டங்களை விட பலமடங்கு கவர்ச்சிசகரமான திட்டங்களுடன் மற்ற சமுதாயத்து வேட்பாளர்கள் அறிவிக்கின்றார்கள்.

இவர்கள் சட்டமன்ற, பாராளுமன்றத்திற்குள் சென்றால் ஒருக்காலும் முஸ்லீம்களுடைய கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக குரல் எழுப்பவே மாட்டார்கள் கூட்டணி கட்சிக்கு ஜால்ரா தட்டிக் கொண்டு தங்களது பதவியை தக்கவைத்துக் கொள்வார்கள் என்பதற்கு இன்னும் அவர்களுடைய கடந்த கால சமுதாய தொண்டினை (?) அலசி ஆராய வேண்டியதும் அவர்களை தேர்ந்தெடுக்க நினைக்கும் முஸ்லீமகளுக்கு அவசியமாகும்.

மூதறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் சமீபத்தில் மன்னடியில் பேசிய உரையை டவுன் லோடு செய்து கேளுங்கள்.

http://tntj.net/Video/Mannady_PJ_Speech_19-4-2009_whyDMK.asp

இதற்கு என்ன தான் தீர்வு ?

ரிசர்வ தொகுதியைப் போராடிப் பெறும் வரை ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் முஸ்லீம்கள் ஓரணியில் திரண்டு குறிப்பிட்ட ஒருக் கட்சியை ஆதரித்தால் அவர்களை வெற்றி பெறச் செய்ய முடியும், அதேப் போன்று குறிப்பிட்ட ஒருக் கட்சியை தோற்கடிக்க முடியும். முதலில் இந்த மனநிலைக்கு முஸ்லீம்களை மாற்றியாக வேண்டும் அதுவரை சட்டமன்ற, பாராளு மன்றக் கணவுகளைக் களைய வேண்டும், மீறி ஆசைப்படுகின்றவர்களை ஃபீல்டிலிருந்தே துடைத்தெறிய வேண்டும் இவர்களை ஓரம் கட்டினால் மட்டுமே மக்களை ஓரணியில் கொண்டுவர முடியம்.

மேற்காணும் இந்த மெகா திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன் முறையாக மார்க்கம் பேசும் இளைஞர்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

அவர்களைக் கொண்டே சடைவடையாமல் தொடர்நது நடத்திய தொடர் முழக்கப் போராட்டங்களாலும், பிரமிக்கத் தக்கப் பேரணிகளாலும் சமீபத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீடும் கிடைக்கப்பெற்றது, எதிர் காலத்தில் அதை இரட்டிப்பாக்குவதற்காகவும் இன்றே அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அடித்தளம் இடப்பட்டு விட்டது அதையும் இன்ஷா அல்லாஹ் கடந்த காலத்தினைப் போன்றே தொய்வில்லாத போராட்டங்கள் மூலம் அடையாமல் ஓயமாட்டோம்.

அதனால் தமிழ்நாடு தவஹ்த் ஜமாஅத் வீதியில் இறங்கி போராட்டம் செய்து வைத்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த திமுகவிற்கு நம்முடைய வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் செலுத்தி அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது ஒவ்வொரு முஸ்லீமுயைட கடமையாகும்.

மக்களை வற்புருத்தலாமா ? நீங்கள் அரசியல் பண்ணலாமா ?

திமுகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று மக்களை வற்புருத்தலாமா ?

அது அவர்வர்களுடைய விருப்பமில்லையா ?

இதை வலுக்கட்டாயமாகத் திணிக்கலாமா என்றெல்லாம் நினைக்கலாம்,

மார்க்கம் நலன் நாடுகிறது, யாருக்காக ? என நாங்கள் வினவினோம், அப்போது நபியவர்கள், அல்லாஹ்விற்காகவும், அவனது வேதத்திற்காகவும், அவனது தூதருக்காகவும், முஸ்லிம் தலைவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் என்று நபி(ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள். அறிவிப்பாளர்: தமீமுத்தாரீ நூல்: முஸ்லிம்

மேற்காணும் விதமாக சமுதாயப் பணிகள் செய்வதற்கு மார்க்கம் தூண்டுகிறது நன்மையை ஏவினால் மட்டும் அழைப்புப்பணி பூரணமாகியதாக கருதப்படாது, தீமையிலிருந்து தடுப்பதும், நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு ஆலோசனை வழங்குவதுமே அழைப்புப் பணியின் முழுமையான சேவையாக கருதப் படும்.

சுதந்திரம் அடைந்த அரை நூற்றாண்டு காலமாக அரசியல் நடத்திய முஸ்லீம் லீக்கினால் சமுதாயத்திற்கு சாதிக்க முடியாததை,

முஸ்லீம் சமுதாயத்தைக் கொண்டு ராதாஸை அரியனையில் அமர்த்தி அழகுப் பார்த்து அரசியல் செய்த ஜிஹாத் கமிட்டியால் சமுதாயத்திற்கு சாதிக்க முடியாததை,

எந்தக் கட்சியுடனும் கூட்டு சேர்ந்து அரசியல் பண்ணாமல் வீதியில் இறங்கிப் போராடி இடஓதுக்கீடு, இன்னும் பல தேவைகளை சமுதாயத்தி;றகு பெற்றுக் கொடுத்து சாதனைப் படைத்தது தவ்ஹீத் ஜமாத்.

அது மட்டுமல்லாமல்

இன்ன கட்சிக்கு வாக்களிப்பது இரத்தத்தில் ஊறிப் போனது என்றிருந்த முஸ்லீம் சமுதாய மக்களின் பழக்கத்தை உடைத்தெறிந்து நமக்கு நல்லது செய்யும் கடசியை மட்டும் ஆதரித்து வாக்களிக்கும் மனநிலையை மாற்றியமைத்ததும் தவ்ஹீத் ஜமாத் தான்.

அதனால் கடந்த குடந்தை மாநாட்டில் வைக்கப்பட்ட தீர்மாணத்தையும், அதை நிறைவேற்றினால் அதற்கு பிரதிபலனாக நமது வாக்குகளை வழங்குவது என்ற வாக்குறுதியின் அடிப்படையிலும் சமுதாய மக்களுடைய வாக்குகளை சிதறடிக்காமல் வழங்;கத் தூண்டுவது நிர்பந்திப்பதாகாது.

ஆட்சியாளர்கள் நமது கோரிக்கையை நிறைவேற்றினார்கள்.

நாம் நமது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு கடமைப் பட்டுள்ளோம்.

மாறு செய்தால் வாக்குறுதி மீறியப் பாவத்துக்காக மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.

...தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.2:177

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP