இவர்களுக்கா உங்கள் ஆதரவு ?
அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரின் மீதும் அந்த ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்டும் நிலவட்டுமாக.
மே 13 நமது தமிழகத்துக்காண நாடாளுமண்ற தேர்தல் தேதி என்று தேர்தல் ஆனையத்தினால் நிர்னையிக்கப்பட்ட தேதி.
இந்நிலையில் ஒரு ஒரு சமுதாய மக்களும் தங்களுக்கு யார் சரியான வேட்பாளர்கள் என்று முடிவேடுக்க துவங்கி விட்டனர்.
நமது இஸ்லாமிய சமுதாயத்தை பொறுத்தவரை இரண்டு கட்சிகள் போட்டியிடுகின்றனர் அதில் ஒன்று முஸ்லீம் லீக் மற்றோண்டு தங்களை சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று கூறிக்கொள்ளும் தமுமுக (ம.ம.க).
நம் சமுதாய மக்களை பொறுத்தவரை முஸ்லீம் வேட்பாளர் என்று மட்டும் பார்த்து வாக்களிக்க முன்வருபவர்கள் பலர் உள்ளனர். இதனை குறை சொல்லவில்லை நமது சமுதாயத்தின் ஒரு ஒரு தனி மனிதனின் ஆசையும் ஆதங்கமும் தான் நமக்கேன்று ஒரு வழுவான அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் வேண்டும் என்பது.
அப்படிப்பட்ட ஆதங்கத்தில் தான் முஸ்லீம்களில் பலர் மனித நேய மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளனர்.மாறாக இவர்கள் பொறுப்பில் வந்தால் நமது சமுதாயத்திற்க்கு ஏதேனும் பயண் உள்ளதா அல்லது நமக்கு இவர்களால் பிரச்சனை தான என்பதை யாரும் சிந்திப்பதிலை.
எல்லாவற்றிக்கும் மேலாக இஸ்லாம் தலைவர்களை தேர்ந்தேடுப்பதில் என்ன கூறியுள்ளது என்பதையும் யாரும் யோசிப்பதில்லை.
தகுதியற்றவரை பொறுப்பில் அமர்த்துவது மறுமை நாளின் அடையாளமாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நாம் நாடு என்று இப்போழுது யோசிக்க வேண்டாம் இஸ்லாமிய அடிப்படையிலும் சமுதாய அடிப்படையிலும் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக நாம் முஸ்லீம் லீக்கை எடுத்துக் கொள்வோம் இவர்களும் நம் சமுதாயத்தை முன்னேற்றப் போகின்றோம் என்று முழக்கமிட்டு அரசியலில் களம் கண்டவர்கள் தான். ஆனால் இவர்களின் நிலையை இன்று நமது சமுதாயமே புரிந்து இவர்களை ஒதுக்கி வைத்திருப்பதை நாமே கண்கூடாக பார்கின்றோம். இருந்தாலும் இவர்கள் செய்து வரும் இஸ்லாமிய மற்றும் சமுதாய விரோத போக்கை இங்கு குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளேன்.
இவர்கள் அரசியளுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்பதை கீழே கொடுத்துள்ள படத்தை பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள்.
- அல்லாஹ்வை மட்டும் பணிய வேண்டிய சிணம் அற்ப மனிதனுக்கு பணிகிறது...
- அரசியல் ஆதாயத்திற்காக அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் மறந்து சமியாரை கைக் கூப்பி வணங்கும் இவருக்கா உங்கள் ஓட்டு ?
- அடுத்ததாக காட்டப்பட்டுள்ள படத்திற்க்கு விமர்சனம் ஏதும் தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.
இன்னும் இவர்களைப் பற்றி கூற வேண்டும் என்றால் பல விஷயங்களை கூறலாம். மத்தியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு இன்னும் கிடைக்கவில்லை, குஜராத்தில் நமது முஸ்லீம் சமுதாயத்திற்க்கு எதிராக அடக்குமுரையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் இதற்க்கு எல்லாம் தனது எம்.பி பதவியை இரஜினாமா செய்யாத இவர் இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதர்க்காக எம்.பி பதவி இராஜினாம என்ற நாடகத்தை நடத்தினாரே இதை நம்மால் மறக்க முடியுமா ?
அடுத்ததாக இலங்கையில் முஸ்லிம்களை கொண்று குவிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற மனித சங்கிளியில் இவர் கலந்து கொண்டது நமது சமுதாய விரோத போக்கை படம் போட்டு காட்டுகிறது.
அடுத்ததாக நம்முடைய முன்னால் சகாக்கள் பற்றி பார்ப்போம் இவர் செய்யும் சமுதாய மற்றும் மார்க்க விரோத போக்கை நம் இனையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதால் இதுவரை நம் இனையத்தளத்தில் வெளியிடதா உண்மைகளை வெளியிடுகின்றோன்.
முதலில் கலைஞருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு என்று தா.மு.மு.க வாரிய வீரர்கள் என்னென்ன கூத்துகளை அரங்கேற்றியுள்ளனர் என்பது பற்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.
24.11.2007 சனிக்கிழமை எங்களால்தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்று மார்தட்டிக் கொள்ளும் கழகக்காரர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு என்று பல ஊர்க்ளிலிருந்து கிளம்பினார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கூனிமேட்டில் பள்ளிவாசலுக்கு அருகே வந்து நின்றது பரங்கிப்பேட்டை கிளை என்று பேனர் எழுதப்பட்ட ஒரு வேன். அந்த வேனிலிருந்து கழகத் தொண்டர்கள் 10 பேர் ஏகப்பட்ட மப்பில், போதை தெளியாத நிலையில் குதித்து அருகில் இருந்த மளிகை கடையில் சிகிரெட்டை வாங்கி புகை விட்டார்கள். அப்போழுது அவர்களுக்கிடையே நடந்த உரையாடலை அனைத்து சகோதரர்களும் அறிந்து கொள்வதற்காக அப்படியே தருகின்றோம்.......
" பாண்டிச்சேரி சரக்கு நல்லாதான் இருக்குப்பா... விலை குறைவு கிக் ஜாஸ்த்தி. சரக்கு கம்மிய வாங்கிட்டு வந்துட்டோம்.... கலைஞரின் பொன் விழா அன்றைக்கு இதை விட இன்னும் ஜாஸ்த்தியா ஏத்திக்கிட்டு, வீரியமா வருவோம்..."
இது தான் அவர்கள் போதையில் நிலை தடுமாறி கூறிய வார்த்தைகள் .
இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை இது பொய்யான தகவல் என்று அவர்கள் வாதிட்டால் இதை கூனிமேடு டி.என்.டி.ஜே ஆதாரத்துடன் நிருபிக்க தயாராக இருக்கிறது.
பரங்கிப்பேட்டை கிளையும் ரெடி
இந்த சம்பவத்தை கூனிமேடு டி.என்.டி.ஜே வை போல் பரங்கிப்பேட்டை டி.என்.டி.ஜே கிளையும் நிரூபிக்கத் தயாராக உள்ளது.
இரண்டாவதாக த.மு.மு.க பாலுசெட்டிச்சத்திரம் கிளை அஜீத் ரசிகர் மன்றத்தில் இனைந்த கூத்து. இந்த கூத்திற்க்கு விமர்சனம் தேவை இல்லை என்று தான் நினைக்கின்றேன்.
மூன்றாவதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் அரங்கேறிய கூத்து.
நான்ங்காவதாக முத்துப்பேட்டையில் இறைவனுக்கு எதிராகவும் கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்களோடு கைகோர்த்த கூத்து .
சகோதர சகோதரிகளே சற்று சீந்தித்து பாருங்கள் அல்லாஹ் இப்படிப் பட்டவர்க்ளுடன் தான ஒற்றுமையை காக்க சொல்கின்றான் .
யாருடன் தேவை ஒற்றுமை ?
பரங்கிப்பேட்டையை சேர்ந்த இந்திய கு(டி)மகன்களுடன் ஒற்றுமையை அல்லாஹ் வலியுருத்துகின்றான.
பாலுசெட்டிச்சத்திரம் அஜீத் ரசிகர் மன்றத்தினரிடம் ஒற்றுமையை அல்லாஹ் நிலைநாட்ட கூறுகின்றான.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள இறைவனுக்கு இனைவைக்கும் இவர்க்ளுடன இனைய வேண்டும.
அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்களோடு கைகோர்த்த இறைமறுப்பாளர்க்ளுடன் கைக்கோர்க்க வேண்டுமா
தா.மு.மு.க வில் இருந்து கொண்டு தவ்ஹீத் பேசும் அன்பு சகோதரர்களே இந்த இறை மறுப்பாளர்களை எதிர்த்து குரள் கொடுப்பது இறைவனால் உங்கள் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்ட கடமையள்ளவா ?
நளைய சமுதாயமே !தா.மு.மு.க இளைஞர்களே இவர்களுடன் இருந்தாள் உங்கள் சமுதாயத்தை வரும் காலங்களில் எப்படி அல்லாஹ் கூறிய வழியில் காப்பற்ற போகிறீர்கள்.
தா.மு.மு.க விற்க்கு பொருளாதார உதவி புரியும் அன்பு நெஞ்சங்களே உங்கள் பனம் அல்டிமேட் அணியின் அற்ப்பமான நோட்டீஸ்களுக்கு செலவிடுவது உங்களுக்கு தெரியுமா.
த.மு.மு.க வின் இந்த நிலமையை பார்க்கும் போது பேராசிரியர் அன்று சொன்னது தான் நினைவில் வருகின்றது . த.மு.மு.க வின் வளர்ச்சிக்கு தவ்ஹீத்வாதிகள் தான் முட்டுக்கட்டை என்று கூரினாரே . ஒரு வேளை இதற்க்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தோம் என்று கூறினார் என்று நினைக்கின்றேன்.
அன்பு சமுதாய மக்களே சற்று சிந்தித்து பாருங்கள் ஒற்றுமை என்ற பெயரில் இவர்களை தான் நீங்கள் ஆட்சியில் ஏற்ற போகின்றீர்களா ? பதவியில் ஏற்ற போகின்றீர்களா ?
இவர்களை பதவியில் ஏற்றினால் நமது ஏகத்துவ கொள்கையும் சமுதாய நலனும் என்ன ஆகுவது.
சற்று சிந்தித்து பாருங்கள்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 3:104
என்று அல்லாஹ் நமக்கு கூறியுள்ளான் எனவே இது போன்ற மார்க்க மற்றும் சமுதாய துரோகிகளை அடையாளம் கண்டு இவர்களை பதவியில் ஏற்ற விடமல் தடுத்து இறைவன் கூறும் வெற்றி பெற்ற சமுதாயமாக நாம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக....
Read more...