சனி, 2 மே, 2009

வாசகர்கள் பயன் பெறுவதற்காக நமது இனையதளதில் புதிய வசதி தினமும் Update செய்யப்படும் நமது இனையதில் பல விடியோ அடியோ மற்றும் இஸ்லாமிய கட்டுரைகளை டவுன்லோட் செய்துகொள்ளலாம் Click Here to Visit


நேர்காணல் என்ற போர்வையில் அரங்கேறிய நாடகம் !
கடந்த 23.04.2009 வியாழன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பொருளாதார மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அமைப்புக்கு எதிராக சதிவேலை செய்ததன் காரண‌மாக தூக்கி எறியப்பட்டவர்கள் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அவர்களது புதிய சகாக்களின் மத்திய சென்னை வேட்பாளர் ஹைதர் அலியை அழைத்து நேர்காணல் என்ற போர்வையில் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.

கடந்த 19.04.2009 அன்று மண்ணடியில் பி.ஜே. அவர்கள் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் நடத்திய நாடகம் தெருக்கூத்தைவிட கேவலமாக முடிவுற்றது.

தயாநிதிக்கு ஓட்டுபோடச் சொன்ன ஹைதர் அலி ?

"நீங்கள் வக்ஃப்பு வாரியத்திற்க்கு ஒரு பிராமண வழக்கறிஞரை நியமித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே ? என்று அவரிடம் கேட்ட கேள்விக்கு ஹைதர் அலி சொன்ன பதில், "யாரும் எனக்கு ஓட்டு போடாதீர்கள் ! திறமை எங்கு உள்ளதோ அந்த திறமைசாலிக்குத்தான் ஓட்டு போட வேண்டும். இதில் இந்து முஸ்லீம் என்றெல்லாம் பார்க்க கூடாது " என்ற கருத்தை மறைமுகமாக அவரே ஒப்பு கொண்டார்.

அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா.. ?

"வக்ஃப்பு வாரியத்தில் நான் ஒரு பிராமண வழக்கறிஞரை நியமித்திருக்கிறேன். இந்த நியமனத்தில் இந்து முஸ்லிம் என்று மதத்தை பார்க்கக் கூடாது. நாம் இங்கிருந்து டெல்லிக்கு போகிறோம் விமானத்தில் செல்லும்போது விமான ஓட்டி ஒரு முஸ்லிமா ? இந்துவா ? என்று பார்ப்போமா ? அல்லது திறைமையானவரா ? என்று பார்ப்போம ? அதுபோலதான் நான் நியமித்த பிராமண வழக்கறிஞர் திறமையானவர் " என்று பதில் கூறினார்.

இதன் மூலம் ஹைதர் அலி சொல்லவருவது என்னவென்றால் மத்திய சென்னையில் நான் போட்டியிடுகிறேன். எதிரணீயில் திறமை மிகுந்த ஏற்கெனவே மத்திய அமைச்சராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற தொலைதொடர்புத் துறையில் பல புரட்சிகளை செய்த திறமைசாலி தயானிதிமாறன் போட்டியிடுகிறார்.

எனவே முஸ்லிம் என்பதற்காக எனக்கு வாக்களிக்காதீர்கள் திறமை சாலியான தயானிதிக்கு வாக்களியுங்கள் ! எப்படி திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து வக்ஃப்பு வாரியத்தில் நான் பிராமண வழக்கறிஞரை நியமித்தேனோ அதைபோல.."இது தான் இவர், இவருக்கு எதிராக வைக்கக்கூடிய வாதம்.

மதுரை வக்ஃப்பு வாரியக் கல்லூரியில் செய்த துரோகம் !

இப்படி பதில் கூறிய அடுத்த நிமிடமே அவருடைய பேச்சுக்கு அவரே முரண்படுகிறார்.
வக்ஃப்பு வாரியத்தில் மாற்று மத வழக்கறிஞரை நியமித்து சரிதானாம். அதே நேரத்தில் மதுரை வக்ஃப்பு வாரிய கல்லூரியில் 9 பேராசிரியர்களின் நியமன விஷயத்தில் முஸ்லிம் பேராசிரியகளை நியமிப்பதுதான் சரி, முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்கவிடாமல் அழகிரிக்கு எதிராக நின்று இவர் தான் தடுத்தாராம் !

இப்படி தார்ப்பாயில் வட்கட்டிய பொய்யை ஹைதர் அலி அந்த நிகழ்ச்சியில் அவிழ்த்துவிட்டார். அரசியல்வாதிக்குரிய அனைத்து தகுதியும் (?) அவரிடம் வந்துவிட்டது என்பதை இந்த சம்பவங்களின் மூலம் நாம் அறிய முடிகிறது.

மதுரை வக்ஃப்பு வாரியக் கல்லூரியில் 9 பேராசிரியர்கள் நியமனத்தில் பெருவாரியாக முஸ்லிம் அல்லாதவர்களை நியமனம் செய்வதற்க்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதே நேரத்தில் தகுதி அடிப்படையில் அந்தப் பதவியை பெற தகுதியான நிலையில் காத்திருந்தவர்களிடம் நான் உங்களுக்கு அனீதி இழைக்கவிடமாட்டேன் என்று இரட்டை வேடம் போட்டவர்தான் இந்த ஹைதர் அலி.

மேலும் பணி மூப்பின் அடிப்படையில் பேராசிரியர்களாக நியமனம் செய்ய தகுதி பெற்ற நிலையில் இருந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த சகோதர, சகோதரிகளை புறந்தள்ளிவிட்டு, இவர் செய்த சதிவேலையை அறிந்து சமுதாய துரோகம் செய்ய காத்திருந்த ஹைதர் அலியை சந்தித்து நியாயம் கேட்க சென்றவர்களிடத்தில் "உங்கள்து இந்த ஒரு காரியத்தி பார்த்தால் நான் செய்ய இருக்கின்ற நாலு நல்ல காரியம் கெட்டுவிடும். இதை கேட்க நீங்கள் யார் ? வெளியே போங்கள்..! உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து பாருங்கள்..! உங்களிடம் நான் பணம் கேட்ட விஷயத்தை சொல்லி என் மீது வழக்கு போடுவதாக இருந்தாலும் போட்டுக் கொள்ளுங்கள். உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது " என்று மிரட்டினாரே இதை ஹைதர் அலி மறக்க முடியுமா ?

அதை தொடர்ந்து அவரை கண்டித்து டி.என்.டி.ஜே நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமும் ஒரு பெரும் நடுக்கம் அவருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த முஸ்லீம் சகோதர சகோதரிகள் இந்த சமுதாயத் துரோகத்துக்கு எதிராக வழக்கு போட்டதால்தான் இவரால் நம் சமுதாயத்திற்க்கு எதிரான துரோகத்தை செய்ய முடியவில்லை தவிர இவராக தடுக்கவில்லை.

பிற சமுதாயத்தினரை நியமன்ம் செய்ய விடாமல் நாம் தடுத்து வைத்துள்ளோம் என்பதே உண்மை. இவர் சமுதாயத்திற்கு செய்யத் துடித்த துரோகத்தையே பெரும் தியாகமாக காட்ட துடிக்கிறார் ! எவ்வளவு பெரிய நாடகம் நடிப்பு என்பதை மக்கள் விளங்கிக் கோள்ள வேண்டும்.
வக்ஃப்பு வாரிய ஊழல்கள்

வக்ஃப்பு வாரியத்தில் இவர் செய்த ஊழல்களில் ஒரு சிலவற்றை சகோதரர் பி.ஜே. மண்ணடியில் பொதுக் கூட்டத்தில் பட்டியல் போட்டார்.
1. பரங்கிப்பேட்டை வக்ஃப்பு நிலத்தை அடிமாட்டு விலைக்கு குத்தகைக்கு விட்டது.
2. திருச்சி வக்ஃப்பு நிலத்தை திமுகவின் அறிவாலயத்திற்க்கு தாரை வார்த்தது.
3. கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பள்ளிவாசல் வக்ஃப்பு நிலத்தை மாயாஜால் பூங்காவினர் மாயாஜாலம் செய்து அபகரித்ததை அங்கிகரித்தது.
4. திருவண்ணாமலை மாவட்டம் போரூர் கிராம வக்ஃப்பு வாரிய சொத்து விஷயத்தில் பண முதலைகளிடம் பலியானது.
5. பூந்தமல்லி வக்ஃப்பில் முறைகேடு செய்ததாக நிருபிக்கபட்ட ஒருவரை மாங்காடு கபரஸ்தான் நிர்வாகியாக நியமித்தது.. என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
ஆனால் வக்ஃப்பு வாரியத்தில் பெரும் ஊழல் செய்து விட்டீர்களாமே ? என்று கேட்க்பட்ட கேள்விக்கு, " பரங்கிப்பேட்டையில் சொத்தை மீட்டுள்ளேன். திருச்சியில் திமுகவிற்க்கு அறிவாலயத்திற்க்கு பல கோடி மதிப்புள்ள நிலத்தை 10,000 வாடகை வாங்கியதை, 30,000 வாடகை வாங்கி மூன்று வருடதிற்க்கு குத்தகைக்கு விட்டுள்ளேன் " என்று சொத்தை பதில் அளித்தவர்.

மற்ற குற்றசாட்டுகளை பற்றி வாய் திறக்காமல் பவ்வியமாக பம்மிக் கொண்டார். ஊழல் செய்ததை நிருபித்தால் பொது வாழ்விலிருந்து விலக தயார் என்ற கூவல் வேறு!

அவரை நோக்கி வைக்கப்பட்ட மற்ற ஊழல்கள் குறித்து வாய் திறக்காததே "எங்க் அப்பன் குதிருக்குள் இல்லை" என்ற ரீதியில் உண்மையை ஒப்புக் கொண்டதாகிவிட்டது. இதை இனி நிருபிக்க வேறு வேண்டுமா ?

பொய்யர் யார் ? வாத்தியாரா ? ஹைதர் அலியா ?

அடுத்ததாக, அந்த பேட்டியில் அதிமுகவுடன் கூட்டனி பேச்சுவார்த்தை நடத்தினோம். இரண்டு சிட்டுகள் தருவதாக கூறினார்கள். ஆனால் இரட்டை இலையில் நிற்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் இரட்டை இலையில் நிற்க முடியாது தனிச் சின்னத்தில்தான் நிற்போம் என்று கூறி மறுத்து விட்டோம் என்ற உண்மையையும் வாய் தவறி ஒப்புக் கொண்டுவிட்டார்.

ஜவாஹிருல்லாஹ் சொன்னது:
(பி.பி.சி. தமிழோசையில்..)

திமுகவுடனும் அதிமுகவுடனும் ஒரே நேரத்தில் கூட்டனி பேரம் பேசுகின்றீர்களே ! இது சந்தர்ப்பவாதம் இல்லையா ? " என்று பி.பி.சி. நிருபர் கேட்ட கேள்விக்கு "எங்களுக்கு அதிகாரத்தை பெறுவதுதான் முக்கியம்" என்று வாத்தியார் பதிலளித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் வாத்தியார் கூறியது :

அவர்களது கூட்டனி அறிமுக பத்திரிக்கையாளர் கூட்டத்தில், அதிமுகவுடன் கூட்டனி தொடர்பாக பேசியது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "அதிமுகவுடன் எந்த பேச்சு வார்த்தைய்ம் நாங்கள் நடத்தவில்லை. அனைத்தும் தவறான தகவல்" என்று தா ஒரு பொய்யன் என்பதை ஜவாஹிருல்லாஹ் நிருபித்தார்.

அதிகாரப்பூர்வ நாளேட்டில் பொய் :

இதே கருத்தையே தங்களது பத்திரிக்கையில் ஏப்ரல் 17 23 தேதியிட்ட (தொகுதி 5 : இதழ் 18) இதழில் பக்கம் 6ல் "அதிமுகவோடு பேச்சு வார்த்தை நடத்தவில்லை " என்ற பொய்யைக் கூறி, இது பொய்யான பத்திரிகை என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.

நேர்காணல் நாடகத்தில்.. !

தங்களது அமைப்பின் தலைவர் அதிமுகவுடன் கூட்டணி குறித்து முன்னுக்குப் பின் முரணாக உளறீ தான் ஒரு பொய்யர் என்று நிருபித்த நிலையில், 24.04.2009 அன்று நடத்தப்பட்ட நேர்கானல் நாடகத்தில் 'அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம் இரண்டு சீட் தருவதாக கூறினார்கள்' என்று ஹைதர் அலி கூறுகிறார் என்றால்.. பொய்யர் யார்? ஜவாஹிருல்லாவா? ஹைதர் அலியா? அல்லது இருவருமா ?
இன்ஷா அல்லாஹ் தொடரும்....

Read more...

வியாழன், 30 ஏப்ரல், 2009

தமுமுக

>>வாசகர்கள் பயன் பெறுவதற்காக நமது இனையதளதில் புதிய வசதி தினமும் Update செய்யப்படும் நமது இனையதில் பல விடியோ அடியோ மற்றும் இஸ்லாமிய கட்டுரைகளை டவுன்லோட் செய்துகொள்ளலாம் Click Here to Visit

தேர்தலில் தமுமுக வை ஆதரிக்காத்து ஏன் ?

கேள்வி : முஸ்லீம் சமுதாயத்தின் உரிமைக்காக பாடுபடும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் தமுமுகவை ஆதரிப்பதிலை என்று முடிவு எடுப்பது சரியா ? யாரோ பொறுப்புக்கு வருவதற்க்கு பதிலாக நம்மவர்கள் பொறுப்புக்கு வந்தால் நல்லதுதானே ?

n எஸ்.அபுதாஹிர்,திருவல்லிகேணி

முஸ்லீம் வேட்பாளரை ஆதறிப்பது என்பது உணர்வுபூர்வமாக பார்ப்பதில் சரியானதாகத் தோன்றலாம்.ஆனால் முஸ்லீம் வேட்பாளர் என்று மட்டும் பார்க்காமல் சமுதாயத்தின் நன்மையையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

முஸ்லீம் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்ற பின்பு முஸ்லீம் சமுதாயத்துக்கே அச்சுறுத்தலாக அமைவார் என்றால் அப்போழுது வேட்பாளாரை விட சமுதாயத்தின் நலனை தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லீம் வேட்பாளருக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலனைப் பின் தள்ளி விட கூடாது.

தமுமுக வை பொறுத்தவரை அவர்கள் நமது இயக்கத்தின் கொள்கைக் கோட்பாடுகளை அழிக்க நினைப்பவர்கள் என்பதாலும், ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு இவர்கள் எதிரானவர்கள் என்பதாலும் அவர்களை முஸ்லிம்கள் ஆதரிக்க கூடாது என்பதே நமது நிலைபாடு.

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் என கூறி மக்களை திரட்டிய தமுமுகவினர், தேர்தலில் போட்டியிடாமலேயே செய்த அராஜகங்கள் எண்ணி மாளாது.

தாங்கள் இயக்கம் நடத்துவதற்காக நமது சமுதாயத்தின் செல்வந்தர்களையும் , பிரமுகர்களையும் மிரட்டி பணம் வசூலித்தனர்.

ஆளும் கட்சியின் கூட்டனி என்ற பெயரை பயன்படுத்தி முஸ்லிம் மக்கள் பிரச்சனையில் தலையிட்டு பணம் வாங்கிக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்தனர்.

அடியாட்கள் மூலம் ஆட்க்களை தூக்கி சென்று மிரட்டி தமது காரியத்தை சாதித்து கொண்டனர்.

சுனாமி ஃப்த்ரா என்ற பெயரில் திரட்டிய நிதியை சம்மந்தபட்டவர்களுக்கு வழங்காமல் தமதாக்கிக் கொண்டனர்.

தமுமுக பொது செயலாளர் வக்ஃப்பு வாரியச் சேர்மன் பதவியைப் பெற்ற பின்பு பள்ளிவாசல் நிர்வாகிகளையும் ஜமாஅதார்களையும் மிரட்டினார்.
வக்ஃப்பு அதிகாரிகளும் தமுமுக உள்ளூர் தலைவர்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளை மிரட்டி பணம் பறித்தனர்.

வக்ஃப்பு சொத்துக்களை அரசியல்வாதிகளுக்கும் பண முதலைகளுக்கும் தமக்கு வேண்டியவர்களுக்கும் தாரை வார்த்தனர்.

தங்களை எதிர்ப்பவர்கள் மீது பொய் புகார்களை கூறி பல்வேறு வழக்குகளை போட்டனர்.

வக்ஃப்பு சொத்தை கொள்ளையடித்த கும்பல் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறியே மிரட்டி காரியங்களை சாதிப்பது, வக்ஃப்பு வாரியத்தை பயன்படுத்தி தமுமுகவினரை நிர்வாகதில் வலுக்ட்டாயமாக நுழைத்தது அகியவை பொதுவாக சமுதாயதிற்க்கு எதிராக இவர்கள் கட்டவிழ்த்த அராஜகங்கள் ஆகும்.

இது தவிர தவ்ஹீத் ஜமாஅதிற்க்கும் தவ்ஹீத் கொள்கைக்கும் எதிராக இவர்கள் செய்த கொடுமைகளும் தனியாக உள்ளன.

தவ்ஹீத் சகோதரர்களாள் தங்களை வளர்த்துக் கொண்ட பின் தவ்ஹீத் பிரச்சாரம் தங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்று பகிரங்கமாக அறிவித்து தவ்ஹீத் சகோதரர்களை கூண்டோடு வெளியேற்றியது.

தவ்ஹீத் ஜமாஅதிற்க்கு எதிராக எந்த இயக்கமோ அல்லது எந்த தனி நபரோ வெளியிடும் அவதூறுப் பிரச்சாரங்கள் அனைத்தையும் தமுமுக கிளை நிர்வாகிகள் மூலம் தமிழகம் மூலம் விநியோகம் செய்தது.

தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும் அதன் நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பரப்புவதற்கெண்றே ஒரு தனி இனையத்தலம் துவக்கி அன்றாடம் அவதூறுகளை பரப்பியது. மின்னஞ்சல் மூலம் அவதூறுகளை பரப்பியது.

தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் தவ்ஹீத் சகோதரர்கள் தாக்குவதற்க்கும் பள்ளிவாசலில் நுழைவதை தடுப்பதற்க்கும் தமுமுக வினர் தலைமை தாங்கியது.

தவ்ஹீத் ஜமாஅதிற்க்கு எதிரான எல்லா இயக்கங்களுடனும் கைக்கோர்த்துக் கொண்டு அவர்களை தவ்ஹீத் ஜமாஅதிற்க்கு எதிராக தூண்டிவிட்டது.

தவ்ஹீத் பிரச்சாரம் தங்களுக்கு எதிரானது என்று கூறி போலி தவ்ஹீத்வதிகளை கொண்டு ஐ.பி.பி ஆரம்பித்து தவ்ஹீத் போர்வையில் தவ்ஹீதை எதிர்த்தது என்று ஆட்டம் போட்டதை எளிதில் நாம் மறந்துவிட முடியாது.

இத்தகையவர்கள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினரானால் அவர்களால் சமுதாயம் எத்தகைய கொடுமைகளை சந்திக்குமோ என்று நாம் அஞ்சுகிறோம்.

தவ்ஹீத் பிரச்சாரத்துக்கும் தவ்ஹீத் வாதிகளுக்கும் இவர்களால் என்ன என்ன இடையூறுகளை செய்வார்களோ என்று நாம் அஞ்சுகிறோம்.

எனவே தமிழகத்தில் உள்ள முஸ்லிம் இயக்கங்களில் முஸ்லிம்களையே மிரட்டும் ஒரே இயக்கமான தமுமுக (ம.ம.க) எந்த அணியில் போட்டியிட்டாலும் தனியாக போட்டியிட்டாளும் அவர்களை தோற்க்கடிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முழு மூச்சுடன் பாடுபடுவதுதான் கடமையாகும்.
உங்களை நீங்களே அழித்து கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
ம‌.ம.க வை ஆதரிப்பதும் நம்மை நாமே அழித்திக் கொள்வதும் ஒன்று தான் என்பதை சமுதாயத்திற்க்கு புரிய வைக்கும் கடமையை தவ்ஹீத் ஜமாஅத் தாட்சண்யமின்றி செய்து முடிக்கும் இன்ஷா அல்லாஹ் !

Read more...

புதன், 29 ஏப்ரல், 2009

>>வாசகர்கள் பயன் பெறுவதற்காக நமது இனையதளதில் புதிய வசதி தினமும் Update செய்யப்படும் நமது இனையதில் பல விடியோ அடியோ மற்றும் இஸ்லாமிய கட்டுரைகளை டவுன்லோட் செய்துகொள்ளலாம் Click Here to Visit

முக்கிய அறிவிப்பு :
தமுமுகவின் பைலாவை காணவில்லை !

கடந்த 19.04.2009 அன்று மண்ணடியில் 'திமுகவிற்க்கு முஸ்லீம்கள் ஆதரவு ஏன்?' ஏன்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பி.ஜே. அவர்கள், தமுமுகவினர் பதவி சுகம் பெறுவதற்காக தங்களது கொள்கை கோட்பாடுகளையும், மானத்தையும் காற்றில் பறக்கவிட்டு தேர்தலில் குதித்திருக்க்ர்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் அவர் கூறும்போது,"அவர்களது பைலாவை கூட அவர்கள் கடைபிடிக்கவில்லை என்று கூறி, தமுமுகவின் பைலாவில் உள்ள விதி (2) :கொள்கை மற்றும் நோக்கம். பிரிவு 3ல் : (அ) நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்பு கூட்டுறவு சங்க அமைப்புகள் ஆகிய எந்த தேர்தலிலும் கழகம் போட்டியிடாது " என்ற விதியைச் சுட்டிக்காட்டி, தற்போது தமுமுகவின் தலைவராக இருக்கின்ற ஜவாஹிருல்லாவும், பொதுச்செயலாளராக இருக்கின்ற ஹைதர் அலியும் எப்படி போட்டியிட முடியும்; இது அவர்களது கொள்கைக்கே எதிரானது இல்லையா ? என்ற கேள்வியை எழுப்பினார்.
மேலும் விதி 25 : தேர்தல் பிரிவு 6: கழகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று நிர்வாகிகளாக பொறுப்பு வகிப்பவர்கள், அரசியல் கட்சியில் எதிலும் பொறுப்பு ஏற்றால் கழகத்தில் அவர் வகிக்கும் பொறுப்பு தானாக ரத்தாகிவிடும். தலைமை நிர்வாகக் குழுவினால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு இது பொருந்தும் " என்ற விதியை சுட்டிக்காட்டி,அரசியல் கட்சியான ம.ம..க ஒருங்கினைப்பாளராக ஜவாஹிருல்லாஹ்வும் , ஹைதர் அலியும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் எப்படி தமுமுகவில் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி, இந்த பைலாவின் அடிப்படையில் உங்களது உறுப்பினர்களை வைத்தே உங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.
சமுதாயத்தின் மானம் காக்க புறப்பட்ட ம.ம.கட்சியினர் பைலாவை காட்டி வழக்கு தொடர்ந்தால் மானம் மலையேறிவிடும் என்ற அச்சத்தில், தங்களது தமுமுகவின் அதிகாரப்பூர்வ இனையத்தளத்தில் 'இயக்க விதிகள்' என்ற தலைப்பிலிருந்த பைலாவையும் அதற்க்கு அடுத்த நாள் அழித்து விட்டனர்.


தங்களின் பதவி சுகத்திற்காக, இயக்க பைலாவையே இனையத்தளத்திலிருந்து நீக்கும் அளவுக்கு துணிந்து விட்ட இவர்களா சமுதாயத்தின் மானம் காக்க போகிறார்கள் ? சமுதாயத்தின் மானம் காக்க புறப்பட்ட இவர்கள் தற்போது மானம் இழந்து நிற்கிறார்கள்.
தமுமுகவின் கழக கண்மணிகளே ! சிந்தியுங்கள் . கழகத்தின் கண் (இல்லாத) மணியை வேண்டுமானால் இவர்கள் நம்ப வைத்து ஏமாற்றிவிடலாம். இவர்களது நாடகத்தை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் நம்பி ஏமாறத் தயாரில்லை என்பதை மட்டும் தற்போதைக்கு சொல்லி வைக்கிறோம்.
எனவே தமுமுகவின் பைலாவை கழக கண்மணிகளே! நீங்களாவது கண்டுபிடித்து கொடுங்கள் !?


-- அபூ நஸ் ரீன், மதுரை

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP