செவ்வாய், 26 மே, 2009

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

>>முதல் முறையாக லண்டனில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

>>பி.ஜே அவர்கள் ஆன்லைனில் கான்ஃபிரன்ஸிங் மூலம் பதில்! புகைப்படங்களுடன் செய்தி..

Read more...

சனி, 23 மே, 2009


கடமையான தொழுகைக்கு பிறகு ஓதும் திக்ருகள்

அல்லாஹ் கூறுகின்றான்:
என்னை நினைவுக் கூறுங்கள். நான் உங்களை நினைக்கின்றேன். மேலும் எனக்கு நீங்கள் நன்றி செலுத்துங்கள்; என்னை நிராகரித்து விடாதீர்கள்.

(அல்குர்ஆன் 2:152)

அன்பிற்க்கினீயவர்களே !
அல்லாஹ்தாலாவினால் உலக மாந்தருக்கு கொடுக்கப்பட்ட உண்னதமான மார்க்கம் இஸ்லாம். அந்த இஸ்லாத்தின் தூய வாழ்வு, இறை வழிபாடுகள் எப்படி என்பதை நபி(ஸல்) அவர்கள் தனது சொல், செயல், அங்கிகாரம் என்ற அடிப்படையில் மார்க்கத்தை நமக்கு கற்றுத் தந்துள்ளனர்.அதன் அடிப்படையில் நாம் நாமது இறைவழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்களின் ஒரு சுன்னத் நமக்கு தெரியாமல் இருக்கும் நிலையில், அந்த சுன்னத் தெரிய வரும் நிலையில் அதை ஹயாத்தாக்கினால் அல்லாஹ் நமக்கு நன்மையை கூலியாக தருகின்றான். ஆகவே

கடமையான தொழுகைக்குப் பிறகு அதாவது இமாம் ஸலாம் கொடுத்தவுடன் உடனே கூட்டு துவா ஓதுவதற்க்கும், அதை பின் தொடர்பவர்கள் ஆமீன் சொல்வதற்க்கும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையில் ஆதாரம் இல்லாத நிலையில் துவாவிற்க்கு முன் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடி தஸ்பிஹ், திக்ருகளை ஓதி நாம் நமது இறைவழிபாட்டினை தூய்மையாக்கி கொள்வோமாக !

இதோ நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் நபி(ஸல்) அவர்களின் ஹதீத்துகளின் துனையோடு

கடமையான தொழுகைக்குப்பின் ஓதவேண்டிய திக்ருகள்

அஸ்தக்ஃபிருல்லாஹ் ‍ ----- > 3 முறை

பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்.

அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம், வ மின்கஸ்ஸலாம், தபாரக்த்த யாதல் ஜலாலி வல் இக்ராம்.

பொருள்: யா அல்லாஹ்! நீயே சாந்திக்குரியவன். உன்னிடமிருந்தே சாந்தி கிடைக்கிறது. மேன்மைக்கும் கண்ணியத்திற்க்கும் உரியவனே! நியே மகத்துவ மிக்கவனாகி விட்டாய்!

அறிவிப்பவர்: ஸவ்பான்(ரலி)
ஆதாரம் : முஸ்லீம்

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்க லஹுலஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவா ஆலா குல்லி ஷையின்கதிர். லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹ் வலாநஃபுது இல்லா இய்யாஹ். லஹுன் நிஃமத்து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாஉல்ஹஸன். லாயிலாஹ இல்லல்லாஹ் முக்லிஸீன லஹுத்தீன் வலவ்கரிஹல் காஃபிரூன்.

பொருள்:வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எந்த இனையும் கிடையாது. ஆட்சி அதிகாரங்களும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடைடையவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ; நன்மையை செய்யவோ முடியாது. வணக்கத்திற்க்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நாங்கள் வணங்கமாட்டோம். அனைத்து அருட்கொடையும் சிறப்பும், சிறந்த புகழும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மார்க்க (வணக்க)த்தை அவனுக்காக மட்டுமே தூய்மையாக்கியவர்களாக அவனை மட்டுமே வணங்குவோம். இதனை இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே!

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா(ரலி)
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்

ஸுப்ஹானல்லாஹ் - 33 முறை

பொருள்: அல்லாஹ் தூய்மையானவனாவான்

அல்ஹம்துலில்லாஹ் - 33 முறை
பொருள்:அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே!

அல்லாஹு அக்பர் - 33 முறை

பொருள் : அல்லாஹ் மிகப் பெரியவன்

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதிர்

அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லீம்

அல்லாஹு லாஹிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸினதுன் வலா நவ்ம். லஹு மா ஃபிஸ் ஸமாவாத்தி வமா ஃபில் அர்ழ் மன் தல்லதீ யஷ்ஃபஉ இன்தஹு இல்லா பி இத்னிஹ். யஃலமு மா பைன யுஹீத்தூன பிஷையிம் மின் இல்மிஹீ இல்லா பிமாஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல் அர்ழ். வலா யஊதுஹு ஹிஃப்ழுஹுமா வஹுல் அலிய்யுல் அலீம்.

பொருள் : அல்குர்ஆன் 2:255 வது வசனத்தைப் பார்க்க‌

ஆதாரம் : ஸஹீஹுல் ஜாமிஃ

குல் ஹுவல்லாஹு அஹத்
குல் அஊது பிரப்பில் ஃபலக்
குல் அஊது பிரப்பின் னாஸ்
ஆகிய அத்தியாயங்களை ஓத வேண்டும்

பொருள் : அல்குர்ஆன் 112,113,114 ஆகிய அத்தியாயங்களைப் பார்க்க‌

ஃபஜர் மற்றும் மஃரிப் தொழுகைக்குப் பின் மேற்கூறப்பட்டவைகளுடன் இவைகளையும் ஓத வேண்டும்.

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்க லஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதிர்
(10 முறை)

குல் ஹுவல்லாஹு அஹத்
குல் அஊது பிரப்பில் ஃபலக்
குல் அஊது பிரப்பின் னாஸ்
ஆகிய அத்தியாயங்களையும் மும்முன்று முறை

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் குபைப்(ரலி)
ஆதாரம் : திர்மித்

தொகுப்பு : ஜுலை 2004 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் பரங்கிப்பேட்டையில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்

Read more...

திங்கள், 18 மே, 2009

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் ?
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்...)

அன்பு சகோதர சகோதரிகளே "மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்" என்ற தலைப்பில் நமது இனையத்தளத்தில் செய்தி வெளியிடுவதற்க்கு காரணம் கடந்த சில நாட்களாக நமக்கு இமெயில், எஸ்.எம்.எஸ் மற்றும் தொலைபேசி மூலம் வரும் மொட்டை மனிதர்களின் மிரட்டல்களுக்கு பதிலடி தரும் நோக்கத்தோடு தான்.

இப்படி நெஞ்சில் தைரியம் இல்லாத சமுதாய விரோதிகளுக்கு ஒரு எச்சரிக்கையை இதன் மூலம் கூற உள்ளோம்.

கடலூர் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இனையத்தளம் மூலமாகவும் மற்றும் மொபைல் தாவா என்று தொடங்கி எஸ்.எம்.எஸ் மூலமாகவும் சமுதாய தலைவர்கள் என்று பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் தலைவர்களின் இஸ்லாம் மற்றும் சமுதாய விரோத போக்கை மிகவும் வெளிப்படையாக ஏக இறைவனின் உதவியோடு ஆதரத்துடன் தமிழகம் முழுவதும் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது.

இந்த முயற்ச்சி அல்லாஹ்வின் பெரும் உதவியோடும் மக்களின் ஆதரவோடும் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டு வருகின்றது..... அல்லாஹ் அக்பர் புகழ் அனைத்தும் ஏகன் இறைவனுக்கே

இதனால் பயனடையும் மக்கள் பலர் எங்களிடம் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும் கருத்துக்களை பார்க்கும் நேரத்தில் இந்த பணியை மேலும் அதிகம் அதிகம் செய்ய வேண்டும் என்ற முயற்ச்சியில் டி.என்.டி.ஜே கடலூர் நகரம் இறங்கியுள்ளது இன்ஷா அல்லாஹ் துவா செய்யவும்....

நாம் ஆதரத்துடன் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விஷயங்களினால் மக்கள் தெளிவடைந்து சமுதய துரோக்கிகளை அடையாளம் காண தொடங்கியுள்ளனர்... இதனால் தங்களின் சாயம் வெளுத்துவிடுமோ என்று கவலைக்குள்ளான சமுதாய விரோதிகளிள் சிலர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒரு விஷயத்தை நாங்கள் இவர்களுக்கு தெளிவு படுத்த விரும்புகின்றோம் அல்லாஹ்விற்க்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படும் நாங்கள் உங்களை போன்ற மனிதர்களுக்கு ஒரு காலமும் பயப்படமாட்டோம் என்பதை உருதிசெய்து கொள்ளுங்கள்.....

மிரட்டல் விடுக்கும் பிணாமிகளே நாங்கள் அல்லாஹ்விற்க்கு மட்டும் அஞ்சும் கூட்டம் உங்களை போன்ற ஊர் பெயர் தெரியாத பிணாமிகளுக்கு அஞ்சுபவர்கள் இல்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்கள் போனில் கூறியதை நேரில் செய்து பாருங்கள் இப்படி கொலைத்தனமாக போனில் மிரட்டினால் நாங்கள் பயப்பட மாட்டோம் எங்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் உண்மை இருக்கின்றது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

இந்த வசனத்தின் அடிப்படையில் நாங்கள் நன்மையை மட்டும் ஏவாமல் தீமையையும் அல்லாஹ்வின் பாதையில் தடுத்து வருகின்றோம். இதனால் எங்கள் உயிர் போகும் என்றால் அதையும் இழக்க தயாராக இருக்கின்றோம் அல்லாஹ்விற்காக.

அல்லாஹ்விற்க்கு சிரிது அஞ்சாமல் தன் வாய்க்கு வந்த தீய வார்த்தைகளை கொண்டு திட்டி எங்களுக்கு வெட்டுவேன் குத்துவேன் என்று கொலை மிரட்டல் விடுக்கும் பினாமிகளே அல்லாஹ்வின் அடியான் பேசினால் நல்லதையே பேசுவன் இல்லையேல் வாய் மூடி இருப்பான் நபி மொழியை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
அடுத்ததாக இப்படி போன் போட்டு மிரட்டும் இவர்கள் தைரியம் இருந்தால் அவர்களின் ஊரையும் பெரையும் சொல்லி மிரட்டட்டும் அப்படி ஊர் பெயர் இல்லாத பினாமிகளாக இருந்தால் மிரட்டுவதை தவிர்க்கட்டும் ஏன் என்றால் கோலை தான் இப்படி ஊர் பெயர் இல்லாமல் மிரட்டுவான்....

கடைசியாக நீங்கள் எப்படி மிரட்டினாலும் நாங்கள் எங்கள் பணியை நிருத்திவிட போவதில்லை அதனால் உங்கள் தொலைபேசி கட்டனங்களை வீணாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்....
நீங்கள் மிரட்டுவது தான் அல்லாஹ் எங்களுக்கு கொடுத்த முதல் வெற்றி என்பதை நீங்களே சிந்தித்து உணர்ந்து கொள்ளுங்கள்

அழைப்பு பணியில் என்றும் அன்புடன்
கலீல்லூர் ரஹ்மான்

Read more...

வெள்ளி, 15 மே, 2009

பாகிஸ்தானிடம் இந்தியா பாடம் படிக்க வேண்டும்

கடந்த 1992 டிசம்பர் 6 மறக்க முடியாத, இந்தியாவின் இறையாண்மை கப்பலேறிய நாள்; சில தீவிரவாதிகள் காவி கொடியேந்தி பகிரங்கமாக முஸ்லிம்கள் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கினர். அதற்க்காக கோபம் கொண்டு எந்த ஒரு முஸ்லீமும் எந்த ஒரு கோவிலையும் இடித்து விடவில்லை நங்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் , நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று கொள்வோம் என்று கூறி காத்துக் கிடக்கின்றனர்.

ஆண்டுகள் 16 ஆகிவிட்டது தீர்ப்பு வெளியானபாடில்லை. ஆனால் முக்கிய குற்றவாளியான எல்.கே. அத்வானியோ நாட்டின் பிரதமராவதற்காக வேட்பாளராக நிற்கிறாராம்.இது இந்தியாவின் தலையெழுத்து ! ஆனால் இந்தியாவில் எந்த ஒரு காரணமுமின்றி பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் பாகிஸ்தானில் சில முஸ்லிம்கள் சில இந்துக் கோவில்களைக் கோபம் கொண்டு சேதப்படுத்தினர். பாகிஸ்தான் அரசு அவர்களைக் கைதும் செய்தது.

அந்த கோவில்களை சீரமைக்க வேண்டும் எனக் கூறி சிறுபாண்மை இந்துக்கள் வைத்த கோரிக்கையை ஏற்ற அரசு தற்போது லாகூரில் சேதமடைந்த 16 கோவில்களைச் சீரமைக்க ஒத்துக் கொண்டுள்ளது. இந்து கோவில்களை புனரமைக்க 60 லட்சம் ரூபாயை ஒதுக்கிய பாகிஸ்த்தான் அரசு, அதைப் புனரமைக்கும் பொறுப்பை தொல்பொருள் ஆராய்ச்சி துறையிடம் வழங்கியுள்ளது.

உணர்ச்சி வசப்பட்டு கோபத்தால் நடந்த செயலைக்கூட நியாயப்படுத்தாமல் பகிஸ்தான் நீதியுடன் நடந்துள்ளது. ஆனால் இந்தியாவில் இதற்க்கு நேர்மாறான நிலைதான் காணப்படுகிறது. இடித்த இடத்தில் பள்ளிவாசல் கட்டும் உரிமை பாகிஸ்தானைவிட இந்தியாவுக்கு அதிகம் உண்டு. அநியாயமாக அரசு ஆதரவோடு தகர்க்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்கள், போரட்டங்கள் முற்றுக்கை என நடத்தியபோதும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது.

தகர்க்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் ஆட்சியாளர்கள் கட்டித் தரவுமில்லை, அதற்க்கு நிதி ஒதுக்கவுமில்லை, முஸ்லிம்களிடம் அதைக் கட்டிக்கொள்ள அனுமதியும் வழங்கவில்லை. மாறாக அந்தப் பள்ளிவாசல் இருந்த பகுதியில் கோவில் கட்டுவதற்கான பணிகள் தான் நடந்தன.

அதோடு முஸ்லீம்களுக்கு சொந்தமான இடத்தில் கோவிலைக் கட்டுவோம் என்று பி.ஜே.பி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் உட்பட எந்த கட்சியும் இது சம்பந்தமாக ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவும் தயராக இல்லை.

குறைந்தபட்சம் மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகள் கூட நாங்கள் ஜெயித்தால் அயோதியில் இடிக்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லும் துணிவைக்கூட பெறவில்லை அல்லது விரும்பவில்லை.

பாகிஸ்தான் நமக்கு எதிரி நாடுதான். அந்த நாட்டின் காரணமாக நமக்கு ஏராளமான தலைவலி தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது.ஆனால் பாகிஸ்தான் சிறூபான்மையான இந்துக்களை மதித்து அவர்களைப் பாதுகாக்கும் பாகிஸ்தான் அரசிடம் இந்த விஷயத்தில் இந்தியா பாடம் படிக்க வேண்டும்.

நாஞ்சிலார்
(உணர்வு)

Read more...

திங்கள், 11 மே, 2009

மாணவர்களுக்கான விழிப்புணர்வு செய்தி ?


நீங்கள் பூமியில் பரவி அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்!. திருக்குர்ஆன் 62:10

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் என்ஜினியரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கத் தொடங்கி விட்டனர் அதற்கான முழு விபரத்தை அறிய கீழ்காணும் லிங்கை சொடுக்கிப் பார்வையிடவும்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=485977&disdate=5/6/2009

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தேர்தல் நெருங்கி விட்டதால் தேர்தலுக்கானப் பணியில் மும்முரமாக ஈடுபடும் பிஸியில் பிள்ளைகளின் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விடாதீர்கள்.

இந்த மாத இறுதி 30 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்திருக்கின்றார்கள்.

புறப்படுங்கள் வறுமையை துடைத்தெறிவதற்கு



இன்று உலகம் முழுவதும் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய சமுதாயமாக நாம் இருக்கின்றோம் படித்து விட்டு கை நிறைய சம்பாதிக்க முடியாதக் காரணத்தினால் சில நேரங்களில் விரக்தி அடைந்து தவறான வழியில் பெருளீட்டும் மோசமான நிலைக்கும் தள்ளப்படுகின்றோம் இன்றும் தமிழகத்தில் இறைவன் தடைசெய்த வட்டித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பிரபல முஸ்லீம் ஊர்கள் இருக்கவேச் செய்கின்றன. முறையாகப் படித்து கைநிறைய ஊதியம் பெற்றால் தவறான வழியில் பொருளீட்டும் அவசியம் வரவே வராது.


ஒருவர் தமக்குரிய உரிமைகளைத் தேடும்போது அதை முறையாகத் தேடட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி இக்கின்றார்கள் .புகாரி 2076

இயற்கை வளம் கொழிக்கும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த நாம் முறையாக பொருளீட்ட வேண்டும் என்றால் இரண்டே வழிகள் தான் இருக்கின்றன ஒன்று படித்து விட்டு இந்திய அரசு அதிகாரிகளாக ஊழியம் செய்து கைநிறைய ஊதியம் பெற வேண்டும், அதற்கடுத்து தொழில் துறைகளில் முன்னேற வேண்டும் இவை இரண்டுக்குமே படிப்பு இன்றியமையாததாகும்.

பாஸ்போட் மோகத்தை கை கழுவுங்கள்.
கடந்த காலங்களில் 10, அல்லது 11, 12 வரைப் படித்து விட்டு அயல்நாடு சென்று பிழைப்பு தேடுவதற்காக பாஸ்போர்ட் அப்ளை செய்தோம் இனிவரும் காலங்களில் அதை கை கழுவி விடுவோம்.

காரணம் இன்று நாம் கடுமையாகப் போராடி அரசாங்கத்திடமிருந்து குறைந்த பட்ச இடஒதுக்கீட்டை அடைந்திருக்கின்றோம் இன்னும் தொடர்ந்து முயற்சி செய்து விகிதாச்சார அடிப்படையில் முறையான இடஒதுக்கீட்டை அடைந்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் அதையும் அடைந்து கொள்வதற்காக வல்ல இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம் இறைவன் நிறைவேற்றித் தருவான்.

மேற்காணும் இடஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவதற்கு அதற்கானப் படிப்பும், சான்றிதழும் அவசியம் தேவை என்பதை நாமறிந்து வைத்திருக்கின்றோம் அதனால் மேற்காணும் அண்ணா பால்கலைக்கழக விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உயர் கல்விப் பயிலுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

பிள்ளைகள் அதிகமான மார்க்குகள் எடுப்பதற்கு ஆர்வமூட்டுங்கள் படிப்பிற்கு தடையாக வீட்டில் இருக்கக் கூடிய பொழுது போக்கு அம்சங்களை தடுத்துக் கொள்ளுங்கள். ( நியூஸ், பயான் போன்ற நிகழ்ச்சிகளுக்காக குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்குங்கள் )

விரக்தி அடையாதீர்கள்
சிறு வயதில் சிலப் பிள்ளைகள் விளையாட்டில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள் படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் அதை மட்டும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இவன் மேல்படிப்பில் கோட்டை விட்டு விடுவான் இவனை நம்பி பெரிய தொகையை செலவிட முடியாது என்று ஆரூடம் கூறி பிள்ளைகளுடைய எதிர் காலத்தை தொலைத்து விடாதீர்கள்.

சிலக் குழந்தைகள் சிறு வயதில் அவ்வாறு படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டில் கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பவர்கள் கல்லூரிப் பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்தி சாதனைப் படைக்கக் கூடியவர்களாக மாறி விடுவார்கள் குழந்தைப் பருவத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வாலிபப் பருவத்தை கணிக்காதீர்கள் நமது கணிப்பு எப்பொழுதுமே பிழையானது விதியின் அமைப்பே உறுதியானது.

ஏழ்மை தடை இல்லை
நாம் ஏழையாக இருக்கின்றோம் நம்முடையப் பிள்ளகளை அதிக செலவு செய்து படிக்க வைக்க இயலாது என்றெண்ணி விரக்தி அடைந்து மேல்படிப்புக்கான முயற்சியை கை விட்டு விடாதீர்கள்.

அதேப் போன்று நமது பெற்றொர் ஏழையாக இருக்கின்றனர் அதனால் நாம் விரும்புகின்ற துறையில் படித்து முன்னேற முடியாது என்றெண்ணி மானவர்கர்கள் விரக்தி அடைந்து விடாதீர்கள்.

நாம் விரும்புகின்ற துறையில் படித்து முன்னேற முடியும் என்ற வேட்கை ஒவ்வொரு மானவனுக்கும் வரவேண்டும் அவ்வாறு வந்து விட்டாலேப் போதும் அதற்கு பெருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதற்கு சமீபத்தில் ஏழை தாய் தகப்பனுக்குப் பிறந்து ஐ.ஏ.எஸ் ஸில் தேர்வு எழுதி வென்ற வீரபாண்டியன் அவர்களின் விடா முயற்சி ஒருப் பெரிய எடுத்துக் காட்டாகும். நல்வழியில் முன்னேற வேண்டும் என்று நினைத்த எவரும் சருக்கியதாக வரலாறேக் கிடையாது.

மார்க்க அறிவுக்கும் தடை இல்லை.
எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்காக முழு நேரத்தையும் செலவிடுவதால் மார்க்க கல்விப் பயில முடியாத நிலை எற்படுமே என்றெண்ணி அஞ்ச வேண்டாம் எந்த நிலையிலும் அதனால் பின்னடைவு ஏற்படாது.

எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில் நுட்ப கல்வி கற்பதற்காக முழு நேரத்தை செலவிட்டாலும் தொழச் செல்வதற்கு எந்த கல்லூரியிலும் தடை கிடையாது, அவ்வாறு தடைவிதிக்கப் பட்டாலும் கிளாஸ் நடக்கும் வரை தான் தடுக்க முடியும், கிளாஸ் முடிந்தப் பிறகு அதற்கு முன் லஞ்ச் டயம் போன்ற இடைவேளையின் போது முஸ்லீம் மானவர்கள் இணைந்து ஜமாத்தாக தொழுது கொள்ள முடியும், விடுமுறை நாட்களில் மார்க்க அறிவை தேடிக் கொள்ள முடியும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

''அன்றைய மக்கள் கொடுக்கல், வாங்கலும் வியாபாரமும் செய்து வந்தார்கள். ஆயினும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய ஒரு கடமை அவர்கள் முன்னே வரும்போது அதை நிறைவேற்றி முடிக்கும் வரை அவர்களின் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அவர்களை திசை திருப்பவில்லை!'' என்று கதாதா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். புகாரி 2059

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் மாணவரணி உருவாக்கப்பட்டு அவர்கள் மாணவர்களிடத்தில் சென்று கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதுடன் கல்லூரி விடுதிகளில் சென்று பயான் செய்யவும் செய்கின்றனர். மேற்காணும் அரும் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும், அதிகபட்சம் பட்டதாரிகளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tntj.net/Adds/Advt_ManaverAni_Porgram_12-4-2009.asp

http://tntj.net/Adds/Advt_ManaverAni_Porgram_Nagoor_Valuthoor_Karaikkal_Kovai_Aanaimalai_Maduravayal.asp

http://tntj.net/Event/Sivagangai/Ilyangudi_Kelvi_Mugam_8-2-2009.asp

http://www.tntj.net/Event/Krishnagiri/Kelvi_Mugam_12-4-2009.asp

வேலை செய்து கொண்டு, அல்லது படித்துக் கொண்டே அவர்களது ஓய்வு நேரங்களில் இந்த மனிதாபிமான சேவையை இளைய தலைமுறை மானவர்களுக்காக செய்து வருகின்றனர்.

5:119... அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

மார்க்கம் பயிலுவதற்கும் அதைப் பரப்புவதுதற்கும் மருத்துவம், எஞ்சினியரிங் போன்ற தொழில் நுட்பக் கல்விப் பயிலுவது எந்த வகையிலும் தடையாக இருக்காது,

அதனால் தேர்தல் நெருங்கி விட்டதால் தேர்தலுக்கானப் பணியில் மும்முரமாக ஈடுபடும் பிஸியில் பிள்ளைகளின் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விடாதீர்கள்.

இந்த மாத இறுதி 30 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவித்திருப்பதால் காலதாமதம் செய்யாமல் பிள்ளைகளை உயர் கல்விப் பயில கல்லூரிகளில் சேர்ப்பதற்கு தயாராகுங்கள். இல்லை என்றால் இடஒதுக்கீடுப் பெற்று அரத்தமில்லாமல் போய்விடும்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

Read more...

  © CUDDALORE TNTJ WEBSITE was created and maintained by by T.H.Khaleelur Rahman 2008

Back to TOP